கோவை பெண்கள் சிறையில், மார்பக புற்றுநோய் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம்!

கோவை பெண்கள் தனிக்கிளைச்சிறையில் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் ‘வரும் முன் காப்போம்’ என்ற எண்ணத்தில், பெண் சிறைவாசிகளுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் மற்றும் மார்பக புற்று நோய் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.


கோவை: கோவை பெண்கள் தனிக்கிளைச்சிறையில் பெண் சிறைவாசிகளுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் மற்றும் மார்பக புற்று நோய் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

தமிழக காவல்துறை இயக்குநர் மற்றும் சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை தலைவர் அம்ரேஷ் பூஜாரி அறிவுரையின் படி கோவை பெண்கள் தனிகிளை சிறையில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

கோவை சரக சிறைத்துறை துணைத்தலைவர் சண்முக சுந்தரம் வழிகாட்டுதலின்படி கோவை மத்திய சிறை கண்காணிப்பாளர் ஊர்மிளா தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில், பெண் சிறைவாசிகளுக்கு கற்பப்பை வாய் புற்று நோய் மற்றும் மார்பக புற்று நோய் கண்டறியும் மருத்துவ சோதனைகள் நடைபெற்றது.

செந்தமிழ் அறக்கட்டளை என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில், ''வரும் முன் காத்தல்" என்ற எண்ணத்தில் நடைபெற்ற இந்த முகாமில், கோவை மாவட்ட மகப்பேறு மருத்துவ சங்க மருத்துவர்கள் ராதிகா, சிலம்புசெல்வி மற்றும் சுதா ஆகியோர் மூலம் பெண் சிறைவாசிகளுக்கு கற்பப்பை வாய் புற்று நோய் மற்றும் மார்பக புற்றுநோய் கண்டறியும் சோதனை நடைபெற்றது.

இந்த முகாமில் இவ்வகையான புற்றுநோய் வரக்காரணம், அதனை தவிர்க்கும் வழிமுறைகள், எவ்வாறு கண்டறிய வேண்டும் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்கள் பெண் சிறைவாசிகளுக்கு அறிவுரை வழங்கினர். மேலும் பெண் சிறை வாசிகளின் சந்தேகங்களுக்கும் விளக்கம் அளித்தனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...