தாராபுரம் அருகே வாட்ஸ் ஆப் கேட்டால் கஞ்சா ஹோம் டெலிவரி! - விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்!

தாராபுரத்தை அடுத்துள்ள குண்டடம் வாகன சோதனையில் பைக்கில் கஞ்சா கடத்திச் சென்ற இருவரை கைது செய்து நடத்திய விசாரணையில் வாட்ஸ் ஆப்பில் மெசேஜ் மூலம் ஆர்டர் செய்துவிட்டு, கூகுள் பேவில் பணம் செலுத்தினால் கஞ்சாவை ஹோம் டெலிவரி செய்து வந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய இருவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.



ஒட்டன்சத்திரம் - திருப்பூர் புறவழிச்சாலையில் குண்டடம் - திருப்பூர் பிரிவில் உள்ள காவல்துறை சோதனை சாவடியில் துணை ஆய்வாளர் பிரதாப் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்த நிலையில், சந்தேகமடைந்த போலீசார் அவர்கள் வைத்திருந்த பையை வாங்கி சோதனை செய்தபோது பை முழுவதும் கஞ்சா தூள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.



உடனடியாக அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.



தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அவர்கள், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அடுத்துள்ள கன்னியம்பட்டியை சேர்ந்த பாண்டி(38), மற்றும் சிவகாளை(28) என்பது தெரியவந்தது.



மேலும், கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 8 கிலோ 300 கிராம் கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் ஆந்திராவில் இருந்து கிலோ கணக்கில் பார்சல் லாரி சர்வீஸ் மூலம் கஞ்சாவை வாங்கி உசிலம்பட்டி அருகே காட்டுப்பகுதியில் உள்ள குடிசை வீடு ஒன்றில் பதுக்கி வைத்துள்ளனர்.

இதனையடுத்து வாட்ஸ் அப் மூலம் வாடிக்கையாளர்கள் மெசேஜ் அனுப்பியவுடன் ஜிபேயில் (GPay) பணத்தைப் பெற்றுக் கொண்டு நேரடியாக யாரும் சந்தேகப்படாத வகையில் இருசக்கர வாகனத்தில் சென்று திருப்பூர், ஈரோடு, கோவை, பொள்ளாச்சி, திண்டுக்கல், கரூர், உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சப்பளை செய்து வருவதாக குற்றவாளிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் தூரமாக உள்ள ஊர்களுக்கு ஆள் செல்ல முடியாத கிராம பகுதிகளுக்கும் கூட கொரியர் மூலம் கஞ்சா பொட்டலத்தின் மீது வாசனை திரவியங்கள் அடித்து கஞ்சா வாடை அடிக்காதவாறு பிளாஸ்டிக் கவர்களால் நன்கு சுத்தி கஞ்சா இலைகளை பவுடராக்கி பார்சல் செய்து அனுப்பி வைப்பதாகவும் கூறியுள்ளனர்.

மேலும் உசிலம்பட்டியில் இருந்து பல்லடத்தைச் சேர்ந்த வியாபாரி பழைய பாக்கியை நேரில் தருவதாக கூறியதால் இருசக்கர வாகனத்தில் வந்த போது ஒட்டன்சத்திரம் சாலை தாராபுரம் எரகம்பட்டி செக்போஸ்டில் மாட்டிக் கொள்வோம் என்பதற்காக மாற்று வழியில் வந்து குண்டடம் செக் போஸ்டில் மாட்டிக்கொண்டதாக குற்றவாளிகள் போலீஸாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

தாராபுரம் டி.எஸ்.பி தனராஜ் தலைமையில் குண்டடம் போலீசார் குற்றவாளிகளை மேலும் துருவி துருவி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அடிக்கடி தாராபுரம் பகுதியில் கஞ்சா கடத்தியவர்கள் கைது செய்யப்படுவது தாராபுரம் பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...