கோவையில் செயல்பட்டு வரும் பொதுத்துறை வங்கியில் சம்பள கணக்கு வைத்துள்ளவர்கள் வழங்கப்படும் கடனுதவிக்காக 44 பேருக்கு போலியான ஆவணங்களை தயார் செய்து, ரூ.1.28 கோடி வரை கடன் பெற்று மோசடி செய்துவிட்டு ஊட்டியில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி மார்ட்டின் சாக்கோவை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை: கோவையில் போலி ஆவணங்களை தயார் செய்து பொதுத்துறை வங்கியில் ரூ.1.28 கோடி மோசடியில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவையில் செயல்பட்டு வரும் பொதுத்துறை வங்கி ஒன்றில் எக்ஸ்பிரஸ் கிரிடிட் லோன் என்ற திட்டத்தில் சம்பள கணக்கு உள்ளவர்களுக்கு கடனுதவி வழங்கப்பட்டது.
இதனையறிந்த கோவையை சேர்ந்த தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் 2019-20 வரை தலைமை மேலாளராக இருந்த மார்ட்டின் சாக்கோ மற்றும் அவருடன் பணிபுரிந்த விஜயகுமார் ஆகியோர் இணைந்து அந்த செக்கியூரிட்டி நிறுவனத்தில் பணிபுரியாத நபர்களுக்கு, அந்த நிறுவனத்தில் பணிபுரிவது போலவும், மாத சம்பளம் பெறுவது போலவும் போலியாக ஆவணம் தயாரித்து அதை வங்கியில் அளித்து கடன் பெற்றுள்ளனர்.
இதன்படி மொத்தம் 44 பேருக்கு அந்த நிறுவனத்தில் பணிபுரிவது போன்று போலி ஆவணம் தயார் செய்து சுமார் ரூ.1.28 கோடி கடன் பெற்று மோசடி செய்துள்ளனர். இது வங்கியின் தணிக்கையின் போது கண்டறியப்பட்டது.
இதையடுத்து மண்டல மேலாளர் செந்தில் குமார் கோவை மாநகர குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் வங்கி மேலாளர் தண்டபாணி, ஜெயபிரகாஷ் நாராயணன், உதவி மேலாளர் ராதிகா, தனியார் செக்கியூரிட்டி நிறுவனத்தில் தலைமை மேலாளராக பணிபுரிந்த மார்ட்டின் சாக்கோ, விஜயகுமார் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதில் ராதிகா, விஜயகுமார் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். இதையடுத்து தனியார் செக்யூரிட்டி நிறுவன தலைமை மேலாளர் மார்ட்டின் சாக்கோ தலைமறைவானார். இதனை தொடர்ந்து கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், ஆய்வாளர் ரேணுகா தேவி வழிகாட்டுதலின்படி தனிப்படையினர் ஊட்டியில் பதுங்கி இருந்த மார்ட்டின் சாக்கோவை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவையில் செயல்பட்டு வரும் பொதுத்துறை வங்கி ஒன்றில் எக்ஸ்பிரஸ் கிரிடிட் லோன் என்ற திட்டத்தில் சம்பள கணக்கு உள்ளவர்களுக்கு கடனுதவி வழங்கப்பட்டது.
இதனையறிந்த கோவையை சேர்ந்த தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் 2019-20 வரை தலைமை மேலாளராக இருந்த மார்ட்டின் சாக்கோ மற்றும் அவருடன் பணிபுரிந்த விஜயகுமார் ஆகியோர் இணைந்து அந்த செக்கியூரிட்டி நிறுவனத்தில் பணிபுரியாத நபர்களுக்கு, அந்த நிறுவனத்தில் பணிபுரிவது போலவும், மாத சம்பளம் பெறுவது போலவும் போலியாக ஆவணம் தயாரித்து அதை வங்கியில் அளித்து கடன் பெற்றுள்ளனர்.
இதன்படி மொத்தம் 44 பேருக்கு அந்த நிறுவனத்தில் பணிபுரிவது போன்று போலி ஆவணம் தயார் செய்து சுமார் ரூ.1.28 கோடி கடன் பெற்று மோசடி செய்துள்ளனர். இது வங்கியின் தணிக்கையின் போது கண்டறியப்பட்டது.
இதையடுத்து மண்டல மேலாளர் செந்தில் குமார் கோவை மாநகர குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் வங்கி மேலாளர் தண்டபாணி, ஜெயபிரகாஷ் நாராயணன், உதவி மேலாளர் ராதிகா, தனியார் செக்கியூரிட்டி நிறுவனத்தில் தலைமை மேலாளராக பணிபுரிந்த மார்ட்டின் சாக்கோ, விஜயகுமார் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதில் ராதிகா, விஜயகுமார் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். இதையடுத்து தனியார் செக்யூரிட்டி நிறுவன தலைமை மேலாளர் மார்ட்டின் சாக்கோ தலைமறைவானார். இதனை தொடர்ந்து கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், ஆய்வாளர் ரேணுகா தேவி வழிகாட்டுதலின்படி தனிப்படையினர் ஊட்டியில் பதுங்கி இருந்த மார்ட்டின் சாக்கோவை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.