கோவையில் தூய்மை பணியாளர் விபத்தில் பலி - இழப்பீடு கோரி உடலை வாங்க மறுத்து போராட்டம்!

கோவை கவுண்டம்பாளையம் அருகே பணிக்கு சென்ற தூய்மை பணியாளர் சித்ரா (48) மீது தனியார் வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க கோரி உடலை வாங்க மறுத்து, சக பணியாளர்கள் மற்றும் சமூக நீதிக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் அருகே விபத்தில் உயிரிழந்த தூய்மை பணியாளர் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி, உடலை வாங்க மறுத்து சக பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை மாநகராட்சி கவுண்டம்பாளையம் பகுதியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தவர் சித்ரா(48). இவர் பணிக்கு புறப்பட்டு சென்ற போது, தனியார் வாகனம் மோதியதில், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து அவரது உடல் கோவை அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்விற்காக எடுத்து செல்லப்பட்டது.



இந்நிலையில் சித்ராவின் உடலை வாங்க மறுத்து சக தூய்மை பணியாளர்கள், மற்றும் அவரது குடும்பத்தினர் கோவை அரசு மருத்துவமனை பிணவறை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



அப்போது, உயிரிழந்த சித்ராவின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.



இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த சமூக நீதிக்கட்சி தலைவர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட அக்கட்சியினர், தூய்மை பணியாளர்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் காரணமாக அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...