கோவை கவுண்டம்பாளையம் அருகே பணிக்கு சென்ற தூய்மை பணியாளர் சித்ரா (48) மீது தனியார் வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க கோரி உடலை வாங்க மறுத்து, சக பணியாளர்கள் மற்றும் சமூக நீதிக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் அருகே விபத்தில் உயிரிழந்த தூய்மை பணியாளர் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி, உடலை வாங்க மறுத்து சக பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாநகராட்சி கவுண்டம்பாளையம் பகுதியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தவர் சித்ரா(48). இவர் பணிக்கு புறப்பட்டு சென்ற போது, தனியார் வாகனம் மோதியதில், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து அவரது உடல் கோவை அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்விற்காக எடுத்து செல்லப்பட்டது.

இந்நிலையில் சித்ராவின் உடலை வாங்க மறுத்து சக தூய்மை பணியாளர்கள், மற்றும் அவரது குடும்பத்தினர் கோவை அரசு மருத்துவமனை பிணவறை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, உயிரிழந்த சித்ராவின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த சமூக நீதிக்கட்சி தலைவர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட அக்கட்சியினர், தூய்மை பணியாளர்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் காரணமாக அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.
கோவை மாநகராட்சி கவுண்டம்பாளையம் பகுதியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தவர் சித்ரா(48). இவர் பணிக்கு புறப்பட்டு சென்ற போது, தனியார் வாகனம் மோதியதில், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து அவரது உடல் கோவை அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்விற்காக எடுத்து செல்லப்பட்டது.
இந்நிலையில் சித்ராவின் உடலை வாங்க மறுத்து சக தூய்மை பணியாளர்கள், மற்றும் அவரது குடும்பத்தினர் கோவை அரசு மருத்துவமனை பிணவறை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, உயிரிழந்த சித்ராவின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த சமூக நீதிக்கட்சி தலைவர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட அக்கட்சியினர், தூய்மை பணியாளர்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் காரணமாக அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.