வால்பாறையில் கஞ்சா பறிமுதல் - கல்லூரி மாணவர்கள் உட்பட 3 பேர் கைது

கோவை மாவட்டம் வால்பாறையில் கஞ்சா வைத்திருந்த கல்லூரி மாணவர்கள் உட்பட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்து, அவர்களிடமிருந்த 50 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறை டவுன் பகுதியில் உள்ள வளையல் கடை அருகே இளைஞர்கள் கஞ்சா உபயோகிப்பதாக காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் வால்பாறை காவல் ஆய்வாளர் கற்பகம் தலைமையிலான காவல்துறையினர் அப்பகுதிக்கு சென்று சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த மூவரிடமிருந்து சுமார் 50 கிராம் கஞ்சாவை கைப்பற்றினர்.

அவர்களிடம் தொடர் விசாரணை மேற்கொண்டபோது சேலத்தை சேர்ந்தசஞ்சய் (வயது19), வால்பாறை மாணிக்கா என்.சியை சேர்ந்த பாலாஜி (வயது19) என்பது தெரியவந்தது. மேலும், இவர்கள் இருவரும் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு வணிகவியல் துறை மாணவர்கள் என்றும் மற்றொருவர் புதுத்தோட்டத்தை சேர்ந்த அரவிந்த் (வயது 21) வேலைசெய்து வருபவர் என்பதும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மூன்று பேரையும் கைது செய்தனர்.

Newsletter

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...