வேகமாகப் பரவும் இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல் - கோவையில் சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை

கோவை மாவட்டத்தில் இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல் பாதிப்பைத் தடுக்க 100 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுவருவதோடு, காண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


கோவை: தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா நோய் தொற்றுபோல காணப்படும் இந்த காய்ச்சலுக்கு வயதானவர்கள், இணை நோய் உள்ளவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் ஆகியோர் எளிதில் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்து உள்ளனர்.

பாதிப்பை உடனுக்குடன் கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் விதமாக கோவை உட்பட மாநிலம் முழுவதும் நடமாடும் மருத்துவ குழுக்கள் நியமிக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் எந்தவித காய்ச்சல் பாதிப்பு இருந்தாலும் அலட்சியம் செய்யாமல் உடனடியாக சுகாதாரத் துறையினரிடம் தெரிவிக்க கர்ப்பிணிகளுக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும் போது, கோவை மாவட்டத்தில் இன்ஃப்ளூயன்ஸா பாதிப்பை கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் விதமாக நாள்தோறும் 100 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த முகாம் மூலம் தினசரி ஐந்தாயிரம் பேர் வரை பரிசோதனை செய்யப்படுகின்றனர். இவர்கள் 180 முதல் 200 பேருக்கு அனைத்து விதமான காய்ச்சல் பாதிப்புகள் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

தீவிர பாதிப்பு இல்லாத மருந்துகள் வழங்கப்பட்டு ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும், முகக்கவசம், சமூக இடைவெளி, அடிக்கடி கை கழுவுதல் போன்ற வழிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்ஃப்ளூயன்ஸா பாதிப்பு அதிகரித்து வருவதால் கர்ப்பிணிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

மாவட்டத்தில் தற்போது 12000 கர்ப்பிணிகள் உள்ளனர். இவர்களுக்கு எந்த விதமான அல்லது லேசான காய்ச்சல் பாதிப்பு இருந்தாலும் உடனடியாக சம்பந்தப்பட்ட கிராம செவிலியர்களிடம் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் எங்கு சிகிச்சை பெற்றாலும் அந்த பகுதியில் கிராம செவிலியர்களிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கர்ப்பிணிகளை தொடர்ந்து கண்காணிக்க சம்பந்தப்பட்ட கிராம செவிலியர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதுதவிர பள்ளி செல்லும் மாணவர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு, பள்ளிக்கு வரும் மாணவர்களின் விவரங்களை அளிக்க மாவட்ட கல்வி அலுவலர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் இருந்து அளிக்கப்படும் விவரங்கள் அடிப்படையில் காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்ட மாணவர்களை அந்த அந்த பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள மருத்துவர்கள் மூலம் சோதனை செய்து சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...