கோவையில் சிறுமியை திருமணம் செய்த கர்ப்பமாக்கிய இளைஞருக்கு ஆயுள் தண்டனை

கோவையில் 16 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய இளைஞருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.15,000 அபரதம் விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கோவை: கோவையில் 16வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கோவையை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவரை 23 வயது இளைஞர் கடந்த 2020இல் திருமணம் செய்துள்ளார். இதையடுத்து சிறுமி கர்ப்பமானதாக தெரிகிறது. பின்னர் அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக சிறுமி சென்றார். அப்போது விசாரித்த போது சிறுமிக்கு 16 வயது மட்டுமே ஆனது தெரியவந்தது.

இதையடுத்து ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள் அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து போலீசார் சிறுமியை திருமணம் செய்த இளைஞர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

பின்னர் இளைஞர் பினையில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கு விசாரணை கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை நிறைவடைந்த நிலையில் 16 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய இளைஞருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.15,000 அபராதம் பிரித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிட்டார்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...