தாராபுரம் அருகே 10 ஆண்டுகளாக நிறுத்தப்பட்ட பேருந்து சேவை - மீண்டும் தொடங்கி வைத்த அமைச்சர்

தாராபுரம் அருகே ஆய்கவுண்டன்பாளையத்தில் பத்தாண்டுகளுக்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து சேவை இன்று மீண்டும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தொடங்கி வைத்தார்.



திருப்பூர்: தாராபுரம் அருகே பத்தாண்டுகளுக்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து சேவை இன்று மீண்டும் அமைச்சர் தொடங்கி வைத்தார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மூலனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வேளாண் பூண்டி ஊராட்சி ஆய்கவுண்டன்பாளையத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.



இதனை அறிந்த மூலனூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி உடனடியாக ஆயி கவுண்டன்பாளையம் சென்று ஆய்வு மேற்கொண்டார் அங்கு உள்ள பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று 10 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து சேவையை பொதுமக்களை நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இன்று பேருந்து சேவை மீண்டும் துவங்கப்பட்டது.



இந்த சேவையை தாராபுரம் சட்டமன்ற உறுப்பினரும், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சருமான கயல்விழி செல்வராஜ் பேருந்து சேவை துவக்கி வைத்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் திமுக திருப்பூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் பத்மநாபன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.



இதைத்தொடர்ந்து வேளாண்பூண்டி ஊராட்சியில் உள்ள சுண்டக்காம்பாளையம் பகுதியில் குடிநீர் தொட்டியை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்பணித்தார்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...