கோவை கணுவாய் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கேரளாவைச் சேர்ந்த பிரவீன் என்ற நபரை தடாகம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து 450 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
கோவை: கணுவாய் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கேரளா வாலிபரை தடாகம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை தடாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலில் பேரில், கணுவாய் பகுதியில் தடாகம் காவல் உதவி ஆய்வாளர் ஆறுமுக நயினார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அவ்வழியாக வந்த ஒரு இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது கஞ்சாவை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த பிரவீன் என்பதும், கஞ்சாவை கடத்தி வந்து விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து அவரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் இருந்து விற்பனைக்காக வைத்திருந்த 450 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
கோவை தடாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலில் பேரில், கணுவாய் பகுதியில் தடாகம் காவல் உதவி ஆய்வாளர் ஆறுமுக நயினார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அவ்வழியாக வந்த ஒரு இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது கஞ்சாவை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த பிரவீன் என்பதும், கஞ்சாவை கடத்தி வந்து விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து அவரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் இருந்து விற்பனைக்காக வைத்திருந்த 450 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.