கோவையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கேரள வாலிபர் கைது

கோவை கணுவாய் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கேரளாவைச் சேர்ந்த பிரவீன் என்ற நபரை தடாகம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து 450 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


கோவை: கணுவாய் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கேரளா வாலிபரை தடாகம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை தடாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலில் பேரில், கணுவாய் பகுதியில் தடாகம் காவல் உதவி ஆய்வாளர் ஆறுமுக நயினார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அவ்வழியாக வந்த ஒரு இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது கஞ்சாவை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த பிரவீன் என்பதும், கஞ்சாவை கடத்தி வந்து விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து அவரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் இருந்து விற்பனைக்காக வைத்திருந்த 450 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...