கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தல் - கோவை ரயில் நிலையத்தில் 3 பெண்கள் கைது!

கோவையில் இருந்து கேரளாவுக்கு ரயில் மூலம் ரேஷன் அரிசி கடத்த முயன்ற கோவை மற்றும் திருப்பூரை சேர்ந்த ஈஸ்வரி, ராஜலட்சுமி மற்றும் மேரி எனும் மூவரை ரயில்வே போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 500 கிலோ ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்தனர்.


கோவை: திருச்சியில் இருந்து கோவை வழியாக பாலக்காடு டவுனுக்கு பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் சிலர் ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்திச் செல்வதாக ரயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

பாலக்காடு செல்வதற்கான பயணிகள் ரயில் கோவை ரயில் நிலையத்தில் உள்ள முதலாவது பிளாட்பாரத்திற்கு வந்தது. இதை அடுத்து, கோவை ரயில் நிலைய ஆய்வாளர் மீனாட்சி தலைமையிலான போலீசார் ரயிலில் ஏறி சோதனை நடத்தினர்.

அப்பொழுது 3 பெண்கள் 500 கிலோ ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரிய வந்தது. இதை அடுத்து, காவல்துறையினர் அரிசியை பறிமுதல் செய்தனர்.

பின்னர் மூன்று பெண்களையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் திருப்பூரைச் சேர்ந்த ஈஸ்வரி, ராஜலட்சுமி, போத்தனூரைச் சேர்ந்த மேரி என்பது தெரியவந்தது.

இவர்கள் திருப்பூர் மற்றும் கோவையில் பொதுமக்களிடம் ரேஷன் அரிசியை விலைக்கு வாங்கி கேரளாவுக்கு கடத்திச் சென்று கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது உறுதிசெய்யப்பட்டது.

தொடர்ந்து, இந்த கடத்தலில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா ? என்று மூன்று பெண்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...