கோவையில் கடன் வாங்கி தருவதாக மோசடி - 4 சவரன் நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்!

கோவை பீளமேடு பகுதியில் நடந்துச் சென்றுக் கொண்டிருந்த குணசெல்வி என்பவரிடம் தனிநபர் கடன் வாங்கி தருவதாக கூறி 4 சவரன் தங்க நகைகளை பறித்துச் சென்ற மர்மநபரை பீளமேடு போலீசார் தேடி வருகின்றனர்.



கோவை: கோவை பீளமேடு அடுத்த ஏடி காலனி பகுதியை சேர்ந்தவர் குணசெல்வி (வயது 50). இவர் அவிநாசி சாலை பகுதியில் உள்ள தனியார் உணவகத்தில் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் இவர் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த நிலையில், அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத நபர் நைசாக பேசினார்.

முன்னணி வங்கியில் கடன்பெற்று தரும் வேலை செய்துவருவதாகவும், விருப்பப்பட்டால் உங்களுக்கு தனிநபர் கடன் பெற்று தருவதாகவும் கூறியுள்ளார்.

கடன் தேவை என்று குணசெல்வி தெரிவித்த நிலையில், அப்பெண்ணை ஒரு வங்கிக்கு அழைத்து சென்றிருக்கின்றார். வங்கிக்கு அருகிலே சென்றவுடன், நீங்கள் நகை அணிந்து வந்து கடன் கேட்டால், உங்களுக்கு தனிநபர் கடன் கிடைக்காது என்று கூறிய அந்த மர்ம நபர், குணசெல்வி அணிந்திருந்த நான்கு சவரன் தங்க நகைகளை வாங்கி பேப்பரில் மடித்து கொடுப்பதுபோல் அவரிடம் கொடுத்தார்.

இந்த நிலையில் குணசெல்வி வங்கியில் காத்திருக்குமாறு கூறி, ஆவணங்கள் சிலவற்றை வாங்கி வருவதாக அப்பெண்ணிடம் தெரிவித்து சென்றார். அந்த நபர் மீண்டும் வரவில்லை. சற்று நேரம் கழித்து அவர் மடித்துக் கொடுத்த காகிதத்தைப் பிரித்து பார்க்கும் பொழுது அதில் தங்க நகை இல்லாமல், கல் இருப்பதை கண்டு குணசெல்வி அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து பீளமேடு காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து, நகையுடன் தலைமறைவான நபரைத் தேடிவருகின்றனர்.

Newsletter

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...