பள்ளி குழந்தைகளுக்கு வாகன வசதி கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை மாவட்டம், அன்னூர் அருகே உள்ள காரேகவுண்டம்பாளையம் பகுதி மக்கள், பள்ளி குழந்தைகளுக்கு வாகன வசதி செய்துதரக் கோரி இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

அம்மனுவில் கூறியுள்ளதாவது:- எங்கள் பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களாக மக்கள் வசித்து வருகிறோம். நாங்கள் அனைவரும் தினக் கூலிகளாக வேலை செய்து வருகிறோம்.



எங்கள் பகுதியில் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் பள்ளிக்கு சென்று ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்புவரை பயின்று வருகின்றனர். ஆனால் எங்கள் ஊரிலிருந்து பள்ளியானது சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

பள்ளி செல்லும் எங்களது குழந்தைகள் பாதுகாப்பு இல்லாமல் பள்ளத்திலும், கரடு முரடான பாதைகளிலும் பயணித்து தினமும் பள்ளி சென்று வருகின்றனர். 

அவர்கள், தினமும் இவ்வாறு நடந்து செல்வதால் உடல்நிலை சரியில்லாமல் போவதும் அடிக்கடி நடக்கிறது. இதனால் அவர்களது பள்ளி படிப்பு பாதிக்கப்படுகிறது.

எனவே, மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு எங்களது பகுதிக்கு வாகன வசதி செய்துதர வேண்டும்" என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் M Sivaguru Prabhakaran கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை நேரில் ஆய்வு செய்தார். மாணவர்க...

பொது போக்குவரத்து வாகனங்களில் GPS மற்றும் Emergency பொத்தான் பொருத்த உச்ச நீதிமன்றம் கட்டாய உத்தரவு

பயணியர் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு மற்றும் தனியார் பொது போக்குவரத்து வாகனங்களில் GPS கருவி மற்றும் Emergency பொத்தான் க...

“மே கார்னிவல் 2026” ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லூரியில் தொடக்கம்..!

“ஆரோக்கியமான பற்கள், ஆரோக்கியமான வாழ்க்கை” என்ற கருப்பொருளில், பொதுமக்களிடையே வாய்நல விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில...

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...