மனைவி, குழந்தைகள் பிரிந்த சோகத்தில், திருப்பூரை சேர்ந்த ஜெயக்குமார் என்பவர், கோவை உக்கடத்தில் விஷம் குடித்து மயங்கினார். கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திருப்பூர்: திருப்பூர் பாலன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது55). இவர் பனியன் கம்பெனியில், கட்டிங் மாஸ்டராக வேலை செய்து வருகிறார். இவர் மது பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் கணவன் - மனைவி இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக கணவரை பிரிந்த அவரது மனைவி குழந்தைகளை அழைத்துக்கொண்டு பிரிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் மன வேதனையுடன் காணப்பட்ட ஜெயக்குமார், கோவை வந்து, உக்கடம் பகுதியில் விஷம் குடித்து மயங்கினார். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் ஜெயக்குமாரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயக்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து இவரது மனைவி லட்சுமி பெரிய கடை வீதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனால் மன வேதனையுடன் காணப்பட்ட ஜெயக்குமார், கோவை வந்து, உக்கடம் பகுதியில் விஷம் குடித்து மயங்கினார். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் ஜெயக்குமாரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயக்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து இவரது மனைவி லட்சுமி பெரிய கடை வீதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.