மனைவி, குழந்தைகளை பிரிந்த சோகம் - கோவையில் பனியன் நிறுவனத் தொழிலாளி தற்கொலை!

மனைவி, குழந்தைகள் பிரிந்த சோகத்தில், திருப்பூரை சேர்ந்த ஜெயக்குமார் என்பவர், கோவை உக்கடத்தில் விஷம் குடித்து மயங்கினார். கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


திருப்பூர்: திருப்பூர் பாலன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது55). இவர் பனியன் கம்பெனியில், கட்டிங் மாஸ்டராக வேலை செய்து வருகிறார். இவர் மது பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் கணவன் - மனைவி இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக கணவரை பிரிந்த அவரது மனைவி குழந்தைகளை அழைத்துக்கொண்டு பிரிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் மன வேதனையுடன் காணப்பட்ட ஜெயக்குமார், கோவை வந்து, உக்கடம் பகுதியில் விஷம் குடித்து மயங்கினார். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் ஜெயக்குமாரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயக்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது குறித்து இவரது மனைவி லட்சுமி பெரிய கடை வீதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...