குருடம்பாளையம் ஊராட்சியில் எல்.ஆர்.ஜி நகர் பகுதியில் ரூ.9 லட்சத்து 7 ஆயிரம் மதிப்பில் 300 மீட்டர் தார் சாலை, மாருதி நகர் பகுதியில் ரூ.11.75 லட்சம் மதிப்பில் தார் சாலை மற்றும் கழிவுநீர் பாதைகளை அமைப்பதற்கான பூமி பூஜையில் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி. அருண்குமார் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.
கோவை: கோவை மாவட்டம் குருடம்பாளையம் ஊராட்சியில் சுமார் 20 லட்சம் மதிப்பில் புதிய தார் சாலை அமைப்பதற்கான பூமி பூஜையில் எம்.எல்.ஏ பி.ஆர்.ஜி.அருண்குமார் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.
பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம் குருடம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட எல்.ஆர்.ஜி நகர் பகுதியில் பிரதான சாலையில் இருந்து 300 மீட்டர் வரை ரூ.9 லட்சத்து 7 ஆயிரம் மதிப்பில் தார் சாலை அமைக்கவும், அதேபோல, மாருதி நகர் பகுதியில் ரூ.11.75 லட்சம் மதிப்பில் தார் சாலை மற்றும் கழிவுநீர் பாதைகளை அமைப்பதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளருமான பி.ஆர்.ஜி.அருண்குமார் கலந்துக்கொண்டு பூமி பூஜை செய்து கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் கோவனூர் துரைசாமி, கே.வி.என்.ஜெயராமன், முன்னாள் பேரூராட்சி தலைவர் ஆனந்தன், பெரியநாயக்கன் பாளையம் ஊராட்சி ஒன்றிய சேர்மன் நர்மதா, துணைத்தலைவர் பூக்கடை ரவி, ஒன்றிய கவுன்சிலர் மாணிக்கம், அசோகபுரம் ஊராட்சித்தலைவர் ரமேஷ், துணைத்தலைவர் ஆடிட்டர் சண்முகசுந்தரம், கவுன்சிலர் பார்த்திபன், டியூகாஸ் துணைத்தலைவர் செல்வராஜ், அதிமுக அவைத்தலைவர் வேலுச்சாமி, கவுன்சிலர் சிவகுமார், பிரிக்கால் ரவி, தொப்பம்பட்டி தாமோதரன், விஜயகுமார், சதாநந்தன், வீரபாண்டி பேரூராட்சி செயலாளர் ராமதாஸ், காண்ட்ராக்டர் ராஜ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.