‘ஸ்கேனர் ஆபரேட்டர்’ நியமனத்தில் தாமதம் - கோவை ஏர்போர்ட்டில் ரூ.30 லட்சம் வருவாய் இழப்பு!

கோவை விமான நிலைய சரக்கக அலுவலகத்தில் ‘ஸ்கேனர் ஆபரேட்டர்’ பணிக்கு ஊழியர்கள் நியமனம் செய்வதில் காலதாமதம் காரணமாக, கடந்த இரண்டு மாதங்களாக உள்நாட்டு சரக்கு போக்குவரத்து பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், கடந்த 2 மாதங்களில் ரூ.30 லட்சம் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.


கோவை: கோவை பீளமேடு விமான நிலைய வளாகத்தில் ஒருங்கிணைந்த சரக்கக வளாகம் அமைந்துள்ளது. உள்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் அனுப்பப்படும் சரக்குகள் இங்கு கையாளப்படுகின்றன. சேவை இல்லாத வெளிநாடுகளுக்கு ‘பாண்டட் டிரக்’ என்ற சேவை மூலம் கோவை விமான நிலையத்தில் இருந்து சரக்குகள் அனுபப்படுகின்றன.



மாதந்தோறும் சராசரியாக உள்நாட்டு போக்குவரத்து பிரிவில் 700 டன் மற்றும் வெளிநாட்டு போக்குவரத்து பிரவில் 150 டன் வீதம் 850 டன் எடையிலான சரக்குகள் கையாளப்பட்டு வந்தன. இந்நிலையில், ஸ்கேனர் ஆபரேட்டர் தொடர்பாக விமான நிலைய ஆணையகம் வெளியிட்ட புதிய விதிமுறையால் பணியாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் கோவையில் இருந்து சரக்குகள் அனுப்பும் பணியும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:

உள்நாட்டு பிரிவில் கோவையில் இருந்து பல்வறு நகரங்களுக்கு அனுப்பப்படும் சரக்குகள் ஸ்கேனர் ஆபரேட்டர்கள் மூலம் சரிபார்க்கப்பட்டு அனுமதி அளித்தபின் விமானங்களில் ஏற்றிச் செல்லப்படும். இதுவரை விமான நிறுவனங்களே ஊழியர்களை நியமித்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டு வந்த நிலையில், இந்திய விமான நிலைய ஆணையகம்(ஏஏஐ) கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் புதிய விதிமுறையை அறிவித்தது.

அதன்படி, விமான நிலைய ஆணையகம் சார்பில் ஸ்கேனிங் ஆபரேட்டர்கள் நியமிக்கப்பட வேண்டும். புதிய விதிமுறையால் கோவை உள்பட நாடு முழுவதும் 13 விமான நிலையங்களில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் சென்னையில் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். திருச்சியில் உள்நாட்டு சரக்கு போக்குவரத்து கையாளப்படுவது இல்லை. மதுரையில் பிரச்சினை இருந்தது. சமீபத்தில் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கோவையில் அதற்கென பிரத்யேக பயிற்சி பெற்ற ஊழியர்கள் இல்லை. இதனால் காலதாமதம் ஏற்படுகிறது. கடந்த இரண்டு மாதங்களாக நிலவும் இப்பிரச்சினையால் கடந்த இரு மாதங்களில் தலா 350 டன் என மொத்தம் 700 டன் எடையிலான சரக்குகள் வேறு விமான நிலையங்கள் மூலம் அனுப்பப்பட்டுள்ளன. இதனால், ரூ.30 லட்சம் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. குறைந்தபட்சம் ஐந்து ஊழியர்கள் தேவைப்படுகின்றனர்.இது தொடர்பாக விமான நிலைய ஆணையக தலைமையகத்திடம் தெரிவித்துள்ளோம். இந்த மாத இறுதிக்குள் ஸ்கேனிங் ஆபரேட்டர்கள் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...