சத்துமாத்திரை சாப்பிட்ட விவகாரம் - மாணவிகள் உடல்நலம் தேறி வருவதாக கோவை அரசு மருத்துவர்கள் தகவல்!

அதிக சத்து மாத்திரைகள் சாப்பிட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மூன்று மாணவிகள் ஓரளவு நலமடைந்து பொதுசிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டனர். தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்ப்டடு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.



கோவை: நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள உருதுப் பள்ளியில் சத்து மாத்திரையை அதிக எண்ணிக்கையில் சாப்பிட்ட 4 மாணவிகள் கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.



அதில் 13 வயது மாணவிக்கு கல்லீரல் பாதிக்கப்பட்டதால் மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் செல்லும் வழியில் சேலம் அருகே உயிரிழந்தார்.

இந்த நிலையிலே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், மூன்று மாணவிகள் கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். அவர்கள் மூன்று பேரும் ஓரளவு நலமடைந்து பொது சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டனர்.

அந்த மாணவிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அரசு மருத்துவமனை மருத்துவ நிபுணர்கள் தெரிவித்த நிலையில், சிறுமிகள் உடல் நலம் தேறியுள்ளதாகவும், விரைவில் வீட்டிற்கு அனுப்ப வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...