முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் நம்பிக்கை வாக்கெடுப்பு மக்கள் மன்ற விருப்பத்திற்கு எதிரானது- மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பு மக்கள் மன்ற விருப்பத்திற்கும் அறநெறிகளுக்கும் எதிரானது என்று மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.

மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் சார்பில் இன்று கோவை பத்திரிகையாளர்கள் மன்றத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது அக்கட்சியின் மாநில செயலாளர் குமாரசாமி செய்தியாளர்களிடயே பேட்டியளித்தார்.

அப்போது, நீதிமன்றத்தால் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ள அதிமுக-வின் முன்னாள், இன்னாள் பொதுச் செயலாளர்கள் தலைமையில் இந்த ஆட்சி நடைபெறுவதாக கூறுவதே அவர்கள் ஆளத்தகுதியில்லாதவர்கள் என்பதை வெளிப்படுத்துவதாக உள்ளது. 

இவர்கள் தலைமையில் ஆட்சி நடைபெறாது என்று எடப்பாடி அறிவித்திருக்க வேண்டும். நிலுவையில் உள்ள மக்கள் பிரச்சனைகளை தீர்க்க தற்போதைய முதலமைச்சர் வழிவகை செய்ய வேண்டும்.

கோவையில் ஆதிவாசிகளின் நிலங்கள் அபகரிப்பு, வனப்பகுதி ஆக்கிரமிப்பு, இயற்கை வள சுரண்டல் என பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளான கார்ப்பரேட் சாமியார் ஜக்கியின் தலைமையில் நடைபெறும் சிவன் சிலை திறப்பு நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடி வருவது ஆரோக்கியமான முன்னுதாரனம் அல்ல. 

எனவே, ஜக்கி வாசுதேவ் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் பிரதமர் கலந்து கொள்ள கூடாது. அவ்வாறு பிரதமர் வருவது உறுதியானால் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் விடுதலை கட்சியின் சார்பில் வருகிற 22 அல்லது 23ம் தேதிகளில் பிரதமரை கண்டித்து கண்டன ஆர்பாட்டங்கள் நடத்தப்படும்.

இதே போல் நாட்டில் அச்சு ஊடக உரிமையாளர்கள் செய்தியாளர்களுக்கு சம்பளம் வழங்காமல் இழுத்தடிக்கும் நிகழ்வுகள் குறித்த தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் தமிழகத்தில் கஞ்சா வியாபாரிகளால் செய்தியாளர் தாக்கப்பட்டுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது. இந்த தாக்குதல்களுக்கு எதிராக பொதுமக்கள் குரல் கொடுக்க வேண்டும் என குமாரசாமி  கோரிக்கை விடுத்தார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...