கோவை ஜிஎன் மில்ஸ் அருகே சுப்ரமணியம்பாளையத்தில் மகளிர் தின கொண்டாட்டம்

கோவை ஜி.என்.மில்ஸ் அடுத்துள்ள சுப்பிரமணியம் பாளையம் 15வது வார்டில் மாமன்ற உறுப்பினர் சாந்தாமணி பச்சைமுத்து, அவினாசிலிங்கம் மனையியல் கல்லூரி கணினி அறிவியல் துறை மற்றும் அவிரா பவுண்டேசன் சார்பில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.



கோவை: ஜி.என்.மில்ஸ் அடுத்துள்ள சுப்பிரமணியம் பாளையத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

கோவை ஜி.என்.மில்ஸ் அடுத்துள்ள சுப்பிரமணியம் பாளையம் 15வது வார்டில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.



மாமன்ற உறுப்பினர் சாந்தாமணி பச்சைமுத்து, அவினாசிலிங்கம் மனையியல் கல்லூரி கணினி அறிவியல் துறை மற்றும் அவிரா பவுண்டேசன் இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்களுக்கு போட்டிகள் நடத்தி பரிசுகளும், குப்பைகளைச் சேகரிக்க பிளாஸ்டிக் குப்பை கூடைகளும் வழங்கப்பட்டது.



கோவை ஜி.என்.மில்ஸ் அடுத்துள்ள சுப்பிரமணியம் பாளையம் 15வது வார்டில் மாமன்ற உறுப்பினர் சாந்தாமணி பச்சைமுத்து, அவினாசிலிங்கம் மனையியல் கல்லூரி கணினி அறிவியல் துறை மற்றும் அவிரா பவுண்டேசன் இணைந்து மகளிர் தின விழா கொண்டாடினர்.



இந்நிகழ்ச்சிக்கு 15வது வார்டு மாமன்ற உறுப்பினர் சாந்தாமணி பச்சைமுத்து தலைமை தாங்கினார். நிகழ்ச்சியின் தொடக்கமாக மரக்கன்றுகளை அவினாசிலிங்கம் மனையியல் கல்லூரி மாணவிகள் நேரு நகரில் நட்டு வைத்தனர்.



தொடர்ந்து சுப்பிரமணியம் பாளையம் சாலையில் உள்ள மாமன்ற உறுப்பினர் அலுவலகம் மற்றும் காங்கிரஸ் கட்சி அலுவலகத்திலும் மகளிர் தின விழா நிகழ்ச்சி நடைபெற்றது.



இதில் சாந்தாமணி பச்சைமுத்து அனைவரையும் வரவேற்று பேசினார். அவிநாசிலிங்கம் கல்லூரியின் ஆசிரியர்கள் சுதா மதி, வள்ளியம்மை, ராதா பிரியா, ஸ்ரீ லட்சுமி ஆகியோர் சிறப்புரை வழங்கினர்.

மேலும் அபிராமி பவுண்டேஷன் தலைவர் ஐஸ்வரியா தேவ் கலந்துகொண்டு மக்கும் குப்பை, மக்காத குப்பை பற்றிப் பேசினார். தொடர்ந்து மகளிர்களுக்கு மூச்சு பயிற்சி மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.



போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் சிறப்பு பரிசுகளும், 15வது வார்டை சேர்ந்த பெண்களுக்குக் குப்பைக் கூடைகளும் வழங்கப்பட்டன. இறுதியில் சுகாதார மேற்பார்வையாளர் மகேஸ்வரி நன்றி கூறினார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...