வடமாநில தொழிலாளர்களுடன் ஹோலி பண்டிகை கொண்டாடிய தொழில்துறையினர்!

தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் கோவை பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் இயல்பு நிலை திரும்பி வருகிறது. கோவையில் அசைவ விருந்துடன் தொழிலாளர்கள், உரிமையாளர்கள் இணைந்து ஹோலி பண்டிகை கொண்டாடினர்.


கோவை: கோவை மாவட்டத்தில் ஜவுளி, கட்டுமானம், வார்ப்படம், பம்ப்செட் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகளிலும், மருத்துவமனைகள், ஓட்டல்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களிலும் வடமாநில தொழிலாளர்கள் அதிக அளவில் பணியாற்றி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பரவிய வதந்தியை தொடர்ந்து தமிழக அரசு மற்றும் பிஹார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநில அரசுகள் இணைந்து விழிப்புணர்வு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தின. இதனால் கோவை மாவட்டத்தில் தற்போது இயல்பு நிலை திரும்பி வருகிறது.



ஹோலி பண்டிகையை முன்னிட்டு பெரும்பாலான தொழில் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. உரிமையாளர்களும் இணைந்து பண்டிகையை கொண்டாடினர்.

தமிழ்நாடு ஓபன் எண்ட் நூற்பாலைகள் சங்கத்தின்(ஓஸ்மா) தலைவர் அருள்மொழி கூறுகையில்,

தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் தற்போது தொழிலாளர்கள் மத்தியில் நிலவிய பீதி வெகுவாக குறைந்துவிட்டது. சொந்த ஊர்களுக்கு சென்ற தொழிலாளர்கள் பெற்றோரிடம் உண்மை நிலவரத்தை தெரிவித்து பண்டிகை முடிந்து 10 நாட்களில் கோவைக்கு திரும்ப உள்ளதாக கூறியுள்ளனர்.



கோவையில் தங்கியுள்ள வடமாநில தொழிலாளர்கள் ஹோலி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாட நேற்று பெரும்பாலான கழிவுபஞ்சு நூற்பாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அசைவ விருந்து தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டது. உரிமையாளர்களும் இணைந்து வண்ணப்பொடிகளை தூவி தொழிலாளர்களுடன் ஹோலி பண்டிக்கையை கொண்டாடினர், என்றார்.

கோவை குறு, சிறு வார்பட தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின்(காஸ்மாபேன்) தலைவர் சிவசண்முககுமார் கூறும்போது, வழக்கமாக ஆண்டுதோறும் ஹோலி பண்டிக்கைக்கு 50 சதவீத வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இந்த ஆண்டு வதந்தியால் ஏற்பட்ட பீதி காரணமாக கூடுதலாக 15 சதவீதம் பேர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர். தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் தற்போது தொழிற்சாலைகளில் இயல்பு நிலை திரும்பி வருகிறது, என்றார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...