கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம் - கொராசான் மாகாணம் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு

கோவை கார் வெடிப்பு சம்பவம், மற்றும் கர்நாடக மாநிலம், மங்களூர் குக்கர் குண்டு வெடிப்புச் சம்பவத்துக்கு நாங்கள்தான் காரணம்’ என்று, ஐ.எஸ் கொராசான் மாகாணம் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றிருக்கிறது. இது குறித்து அவ்வமைப்பின் ஆதரவு இதழான வாய்ஸ் ஆப் கொரோசான் செய்தி வெளியிட்டுள்ளது.


கோவை: கோவை கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கடந்த ஆண்டு தீபாவளிக்கு முந்தைய தினம் கார் வெடிகுண்டு வெடித்தது. இதில் ஜமேசா முபின் (வயது29). என்பவர் உயிரிழந்தார். அவர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் மிகப்பெரிய அளவிலான வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.



வழக்கு என்.ஐ.ஏ-வுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது. இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜமேஷா முபின் மற்றும் கைது செய்யப்பட்டவர்களுக்கு தடை செய்யப்பட்ட ஐ.எஸ் இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாக அப்போதே தகவல் வெளியானது. ஆனால், இந்தச் சம்பவம் தொடர்பாக இத்தனை நாள்கள் எந்த அமைப்புகளும் பொறுப்பேற்கவில்லை.



இந்த நிலையில் `கோவை கார் வெடிப்பு சம்பவம், மற்றும் கர்நாடக மாநிலம், மங்களூர் குக்கர் குண்டு வெடிப்புச் சம்பவத்துக்கு நாங்கள்தான் காரணம்’என ஐ.எஸ் கொராசான் மாகாணம் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றிருக்கிறது. இது குறித்து அவ்வமைப்பின் ஆதரவு இதழான வாய்ஸ் ஆப் கொரோசான் செய்தி வெளியிட்டுள்ளது.

தென்னிந்தியாவிலுள்ள தங்களது இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதிகள் மூலம் இரண்டு சம்பவங்கள் நடத்தப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து கோவையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது.

இது குறித்து போலீஸார் கூறுகையில், கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக, தடைசெய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பில் இருந்ததாக 200 பேரைச் சந்தேக வளையத்துக்குள் கொண்டு வந்து கண்காணித்துவருகிறோம். தற்போது ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றிருப்பதால் அவர்களின் நடவடிக்கையைத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம்.

கார் வெடிப்புச் சம்பவத்துக்கு ஐ.எஸ் அமைப்பு உண்மையிலேயே பொறுப்பேற்றிருக்கிறதா அல்லது அவர்கள் பெயரில் வேறு யாராவது தகவல் வெளியிட்டிருக்கிறார்களா? என்றும் விசாரித்துவருகிறோம், என்றனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...