வால்பாறை நகராட்சியில் மகளிர் தின கொண்டாட்டம் - உற்சாகமாக கொண்டாடிய பெண்கள்!

உலக மகளிர் தினத்தையொட்டி கோவை வால்பாறை நகராட்சியில், நகர மன்ற தலைவர் அழகுசுந்தரவல்லி தலைமையில் நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் நகராட்சி பெண் ஊழியர்கள் இணைந்து கேக் வெட்டி இனிப்புகள் வழங்கி மகளிர் தினத்தை உற்சாகமாக கொண்டாடினர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் இன்று மகளிர் தினத்தை முன்னிட்டு நகராட்சி மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி தலைமையில் பெண்கள் கேக் வெட்டி இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு வால்பாறை உள்பட பல்வேறு இடங்களில் மகளிர் தினத்தை பெண்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் வால்பாறை நகராட்சியில் நகர மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி தலைமையில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.



இந்த நிகழ்வில் நகர மன்ற உறுப்பினர்கள், தூய்மை பணியாளர்கள், ஊரக வளர்ச்சி ஊழியர்கள், தொண்டு நிறுவன பெண்கள் ஆகியோர் இணைந்து நகராட்சி வளாகத்தில் மகளிர் தினத்தை கொண்டாடினர்.



இதில், பெண்களுக்கு கோலம் வரைதல் போட்டி நடத்தப்பட்டு, நன்றாக கோலம் போட்டவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.



இதனை தொடர்ந்து நகர மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி, மகளிர் தினத்தை முன்னிட்டு கேக் வெட்டி இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் நகர மன்ற தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊரக வளர்ச்சி பெண்கள் அனைவரும் கலந்து கொண்டு உற்சாகமாக கொண்டாடினர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...