திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நடந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய எம்எல்ஏ உடுமலை கே.ராதாகிருஷ்ணன், ஈரோடு தேர்தலில் பணப்பட்டுவாடா செய்து மக்களை ஏமாற்றி வெற்றி பெற்றுள்ளதாக குற்றச்சாட்டினார்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த சிவசக்தி காலணி பகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் குடிமங்கலம் தெற்கு ஒன்றிய செயலாளர் முருகேசன் தலைமையில் நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும் திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், உடுமலை சட்டமன்ற உறுப்பினருமான உடுமலை கே. ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:

கடந்த 2011ம் ஆண்டு முதல் 2016ஆண்டு வரை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு வழங்கினார். குறிப்பாக அ.தி.மு.க ஆட்சியின்போது உடுமலைப்பேட்டை பேருந்து விரிவாக்கம், நகராட்சி புதிய கட்டிடம். கால்நடை மருத்துவ பயிற்சி மையம், சாலை விரிவாக்கம், உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது.
தற்போது நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் திமுகவினர் பொய் வாக்குறுதி அளித்து பணப்பட்டுவாடா செய்து மக்களை ஏமாற்றி வெற்றி பெற்றுள்ளனர்.
அ.தி.மு.க.ஆட்சியில் மகளிர்களுக்கு மானியத்தில் வழங்கிய இரு சக்கர வாகனங்கள், தாலிக்கு தங்கம் வழங்கும் நிதி உதவி என பல்வேறு நல்ல திட்டங்களை திமுக அரசு நிறுத்தி உள்ளது. இவற்றிற்கெல்லாம் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும் என்பதில் எந்த ஒரு ஐயமும் இல்லை.
இவ்வாறு அவர் பேசினார். இந்தப் பொதுக்கூட்டத்தில் உடுமலை நகர செயலாளர் ஹக்கிம், குடிமங்கலம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்பர்ராஜன், குடிமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் பிரனேஷ், நகர கழக நிர்வாகிகள் ஒன்றிய நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
அப்போது அவர் பேசியதாவது:
கடந்த 2011ம் ஆண்டு முதல் 2016ஆண்டு வரை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு வழங்கினார். குறிப்பாக அ.தி.மு.க ஆட்சியின்போது உடுமலைப்பேட்டை பேருந்து விரிவாக்கம், நகராட்சி புதிய கட்டிடம். கால்நடை மருத்துவ பயிற்சி மையம், சாலை விரிவாக்கம், உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது.
தற்போது நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் திமுகவினர் பொய் வாக்குறுதி அளித்து பணப்பட்டுவாடா செய்து மக்களை ஏமாற்றி வெற்றி பெற்றுள்ளனர்.
அ.தி.மு.க.ஆட்சியில் மகளிர்களுக்கு மானியத்தில் வழங்கிய இரு சக்கர வாகனங்கள், தாலிக்கு தங்கம் வழங்கும் நிதி உதவி என பல்வேறு நல்ல திட்டங்களை திமுக அரசு நிறுத்தி உள்ளது. இவற்றிற்கெல்லாம் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும் என்பதில் எந்த ஒரு ஐயமும் இல்லை.
இவ்வாறு அவர் பேசினார். இந்தப் பொதுக்கூட்டத்தில் உடுமலை நகர செயலாளர் ஹக்கிம், குடிமங்கலம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்பர்ராஜன், குடிமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் பிரனேஷ், நகர கழக நிர்வாகிகள் ஒன்றிய நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.