கோவையில் தொடர் இருசக்கர வாகனம் திருட்டு - இளைஞர் கைது செய்து 3 வாகனங்கள் பறிமுதல்

கோவையில் நள்ளிரவில் இருசக்கர வாகனங்கள் திருட்டு அடிக்கடி நடந்து வருகிறது. இந்த திருட்டில் ஈடுபட்ட ஒண்டிபுதூரை சேர்ந்த விஜயகாந்த் என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 3 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.


கோவை: கோவையில் நள்ளிரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி திருடப்பட்டு வருகின்றன.

சாவி இன்றி, வயரை கழட்டி, லாக்கை உடைத்து லாவகமான முறையில் வாகன கொள்ளை அரங்கேறிய நிலையில், சிசிடிவி காட்சிகளைக் கொண்டு திருடர்களை பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் அடிப்படையில், போலீசார் நடத்திய விசாரணையில் ஒண்டிப்புதூரில் வசிக்கின்ற விஜயகாந்த் என்ற நபர் கைதாகியுள்ளார். பொது இடங்களுக்குச்சென்று இருசக்கர வாகனங்களை திருடுவது விஜயகாந்த்தின் வாடிக்கை என விசாரணையில் தெரியவந்துள்ளது.

விஜயகாந்தை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து மூன்று இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். ஐ லவ் கோவை பார்க்கிங், ராஜ வீதி, வடகோவை உள்ளிட்ட இடங்களில் திருடப்பட்ட 3 இருசக்கர வாகனங்களை விஜயகாந்திடமிருந்து மாநகர போலீசார் மீட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, வாகன கொள்ளையில் ஈடுபட்ட மற்ற குற்றவாளிகளைத் தேடும் பணியும் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...