தாராபுரத்தில் கம்யூனிஸ்ட் சார்பில் பிரச்சார இயக்கம் - 10 அம்ச கோரிக்கைகள் குறித்து விழிப்புணர்வு!

சிஐடியூ போக்குவரத்து தொழிற்சங்கத்தின் மாநாடு, சென்னையில் வரும் 14ஆம் தேதி நடக்க உள்ள நிலையில், அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அரசு போக்குவரத்து கழகத்தை பாதுகாக்க கோரியும் தாராபுரத்தில் சிபிஎம் கட்சி சார்பில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது.


திருப்பூர்: அரசு போக்குவரத்து ஊழியர்கள் சங்கம் சிஐடியு சார்பில் மார்ச் 14ஆம் தேதி 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி சென்னையில் கோரிக்கை மாநாடு நடைபெற உள்ளது.

இது குறித்த விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் கொண்டு செல்லும் வகையில் அரசு போக்குவரத்து கழகங்களை பாதுகாத்திடவும் 10 அம்ச கோரிக்கைகள் குறித்தும் தாராபுரத்தில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது.

அப்போது, அரசு போக்குவரத்தை பலப்படுத்தவும், பாதுகாத்து வரவும் செலவுக்கு இடைப்பட்ட தொகையை ஈடுகட்ட தமிழக அரசு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், காலாவதியான பேருந்துகளை மாற்றி புதிய பேருந்துகளை வாங்கிட வேண்டும், பேருந்துகளை முறையாக பராமரிப்பு செய்ய உதவி பாகங்களை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மேலும், தொழிலாளர்களிடம் இருந்து பிடித்தம் செய்த தொகை 10,000 கோடியை அரசு திரும்ப வழங்க வேண்டும், 1.4.2013க்கு பின் பணியில் சேர்ந்த தொழிலாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு பண பலன்களை வழங்கிட வேண்டும், போக்குவரத்து கழகத்தில் உள்ள காலி பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும், ஒப்பந்த முறையில் வேலைக்கு ஆட்களை நியமிப்பதை கைவிட வேண்டும் உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகள் குறித்தும் இந்தப் பிரச்சாரத்தின்போது வலியுறுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் கனகராஜ், அரசு போக்குவரத்து ஊழியர் சங்க கிளை தலைவர் அப்துல் ஜாஃபர், மண்டலத் துணைத் தலைவர் ராமசாமி மற்றும் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...