கோவையில் வடமாநிலத்தவரகள் அதிகம் வசிக்கும் ஆர்.எஸ்.புரம் பகுதியில் ஹோலி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாட்டப்பட்டது. இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வண்ணப்பொடிகளை பூசிக்கொண்டு உற்சாகமாக ஹோலியை கொண்டாடினர்.
கோவை: வண்ணங்களின் திருவிழாவான ஹோலி பண்டிகையை கோவையில் உள்ள வட மாநிலத்தவர்கள், வண்ணப்பொடிகளை ஒருவருக்கொருவர் பூசிக்கொண்டு உற்சாகமாக கொண்டாடினர்.
வட இந்தியர்களின் பாரம்பரிய பண்டிகைகளில் ஒன்றான ஹோலிப் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படும் ஒன்றாகும். இந்த பண்டிகையின்போது வண்ண பொடிகளை ஒருவருக்கொருவர் பூசி கொண்டு நடனமாடி பாடல்கள் பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர்.
இந்த ஹோலி பண்டிகை கோவையில் வட இந்தியர்கள் அதிகமாக வசிக்கும் இடங்களிலும் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒன்றாக கூடி ஒருவர் ஒருவர் வண்ண பொடிகளை பூசிக்கொண்டு விஷ்ணு கடவுளை வழிபட்டு பாடல்கள் பாடி பாரம்பரிய நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொள்வர்.
அதன்படி கோவையில் வட இந்தியர்கள் அதிகமாக வசிக்கும் ஆர்.எஸ்.புரம் பகுதியில் இன்று ஹோலிப் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் வண்ணப் பணிகளை பூசிக்கொண்டு ஹோலியை கொண்டாடினர்.
குறிப்பாக விஷ்ணு கடவுளை முன்னிறுத்தி கொண்டாடப்படும் இந்த ஹோலி பண்டிகையில் சில குழந்தைகள் விஷ்ணுவைப்போல் வேடமணிந்து ஹோலி பண்டிகையை கொண்டாடியது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.