சூலூரில் உண்டியல் திருட்டு வழக்கில் இளைஞர் கைது - அடிதடி வழக்கு விசாரணைக்கு வந்தபோது சிக்கினார்

சூலூர் காவல் நிலையத்திற்கு அடிதடி வழக்கு விசாரணைக்கு வந்த நாகம்மநாயக்கன்பாளையத்தை சேர்ந்த விஷ்ணு என்பவரை பிடித்து போலீசார் விசாரித்ததில், அதே பகுதியில் ஐயப்பன் கோவில் உண்டியல் உடைத்து திருடிய வழக்கிலும் தொடர்பு இருப்பதை அறிந்து விஷ்ணுவை கைது செய்தனர்.


கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள நாகமநாயக்கன்பாளையம் பகுதியில் ஐயப்பன் கோவில் உள்ளது.

கடந்த 10 நாட்களுக்கு முன் கோவிலில் இருந்த உண்டியலை உடைத்து திருடப்பட்டதாக சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பாக கோவிலில் பதிவாகி இருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணையை முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையில் இன்று அதே பகுதியில் நடந்த ஒரு அடிதடி வழக்கு ஒன்றில் விசாரணைக்காக இளைஞர் ஒருவர் காவல்நிலையம் வந்துள்ளார். அப்போது எதேச்சையாக கோவில் நிர்வாகிகள் சிலர் காவல் நிலையத்திற்கு வந்துள்ளனர்.



அப்போது, கோவில் உண்டியலை உடைத்த நபரைப் போலவே இருந்த இளைஞரைப் பார்த்து சந்தேகம் அடைந்த கோவில் நிர்வாகிகள் அது குறித்து ஆய்வாளரிடம் தெரிவித்தனர்.

சுதாகரித்துக் கொண்ட போலீசார் அடிதடி வழக்கில் விசாரணைக்கு வந்த இளைஞரைப் பிடித்து தங்கள் பாணியில் விசாரித்தனர். அதில், அவர் நாகம்மநாயக்கன்பாளையத்தை சேர்ந்த மாரியப்பன் என்பவரது மகன் விஷ்ணு(வயது27) என்பதும், உண்டியல் உடைத்து திருடியிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். உண்டியல் திருடன் தானாக காவல் நிலையம் வந்து சிக்கிக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...