ராகுல் காந்தியின் நடைபயணம் நிறைவடைந்ததை முன்னிட்டு கோவை வால்பாறையில் கட்சி கொடியேற்றிய காங்கிரஸ் கட்சியினர், எல்.ஐ.சி, எஸ்.பி.ஐ ஆகியவற்றில் மக்கள் முதலீடு செய்த பணத்தை கடன் கொடுத்து வசூலிக்காமல் இருக்கும் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
“பாரத் ஜோடோ யாத்ரா” என்ற நடைபயணத்தை மேற்கொண்ட காங்கிரஸ் கட்சி எம்.பி ராகுல் காந்தி நிறைவு செய்ததை முன்னிட்டு ஒவ்வொரு பகுதியிலும் கட்சி கொடி ஏற்ற காங்கிரஸ் கட்சியினர் திட்டமிட்டனர். இதன் அடிப்படையில் வால்பாறை பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட இடத்தில் காங்கிரஸ் கட்சியினர் காங்கிரஸ் கட்சி கொடி ஏற்றினர்.
வாட்டர் பால்ஸ், ரொட்டிகடை, வால்பாறை, அண்ணா திடல், காந்தி சிலை, புதிய பேருந்து நிலையம், குரங்கு முடி போன்ற பத்துக்கு மேற்பட்ட எஸ்டேட் பகுதிகளில் காங்கிரஸ் கட்சி கொடி ஏற்றினர். இதை தொடர்ந்து வால்பாறை பழைய பேருந்து நிலையம் முன்பு மத்திய அரசை கண்டித்து சுமார் 20க்கும் மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எல்ஐசி, ஸ்டேட் பேங்க் போன்ற வங்கிகளில் முதலீடு செய்த பணங்களை கடன் கொடுத்து கடன்களை திரும்ப பெறாமல் தள்ளுபடி செய்வதால், பொதுமக்களின் பணம் வீணாகுவதாகவும், சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசின் செயல்பாடுகள் சரியில்லை என்று கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நகர செயளாலர் அமீர், மாநில பொது குழு உறுப்பினர் பேபி, கோவை தெற்கு மாவட்ட தலைவர் பகவதி, மாநில பொது குழு உறுப்பினர் ஜோதிமணி, பிரபாகரன், லசர்ஷ் முனியாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.