உடுமலை பத்ரகாளியம்மன் கோவிலில் திருக்கல்யாண விழா - பக்தர்கள் சாமி தரிசனம்!

உடுமலை அடுத்த சங்கிலி வீதியில் உள்ள பத்ரகாளியம்மன் கோவிலில் நடந்த திருக்கல்யாண வைபவம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. சூலத்தேவருடன் திருக்கல்யாண அலங்காரத்தில் அருள் பாலித்த பத்ரகாளி அம்மனை திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள் பத்ரகாளியம்மன் கோவில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து சாமி தரிசனம் செய்தனர்.

உடுமலை அடுத்த சங்கிலி வீதியில் உள்ள பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா கடந்த 21ஆம் தேதி சாமி சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இந்த துவக்க விழாவின் போது, கருப்பண்ணசாமி பூஜை, திருமூர்த்தி மலையிலிருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டு பத்ரகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், கொடியேற்றுதல், காப்புக் கட்டுதல், கும்பம், பூவோடு எடுத்து வருதல், மாவிளக்கு, பொங்கல் வைத்து வழிபாடு, உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.



திருவிழாவின் முக்கிய நிகழ்வான அம்மன் திருக்கல்யாணம் இன்றுநடைபெற்றது. பிரசன்ன விநாயகர் திருக்கோயில் அர்ச்சகர் கிரிவாச பகவதி சிவாச்சாரியார் தலைமையில் ஐயப்பன் கோவில் அர்ச்சகர் சுந்தரமூர்த்தி, பத்ரகாளியம்மன் கோவில் அர்ச்சகர் ஹரிவார சிவம், பரம்பரை கௌரவ பூசாரி முருகானந்தம், உடுமலை டாக்டர் சிவக்கனி சுபாஷ் ஆகியோர் முன்னிலையில் வெகு விமர்சையாக நடந்தது.



சூலத்தேவருடன் திருக்கல்யாண அலங்காரத்தில் அருள் பாலித்த பத்ரகாளி அம்மனை திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து ஊஞ்சல் உற்சவம், சிறப்பு ஆராதனைகள் நடந்தது. பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் பரிவட்டம் கட்டப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நாதஸ்வர மேளதாளம், கேரள செண்டை மேளம் முழங்க அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. சங்கிலி வீதி, அமணலிங்க வீதி, மற்றும் சதாசிவம் வீதி வழியாக குட்டை திடலை அடைந்தது. அங்கு வானவேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனைதொடர்ந்து இன்று மாலை கொடி இறக்குதல், கும்பம் விடுதல், நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இந்நிலையில், நாளை மாலை 7 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவும் அதனைத் தொடர்ந்து மகா அபிஷேகமும் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...