கோவையில் இருந்து கேரளா செல்லும் அனைத்து சாலைகளையும் மறித்து மார்ச் 12-யில் போராட்டம் நடத்த அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு

பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரளா அரசைக் கண்டித்து வருகிற மார்ச் 12- ஆம் தேதியன்று கோவையில் இருந்து கேரளா செல்லும் அனைத்து சாலைகளையும் மறித்து போராட்டம் நடத்த இருப்பதாக கோவையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பவானி ஆற்றின் குறுக்கே கேரள எல்லைக்குள் 6 இடங்களில் தடுப்பணைகள் கட்டும் பணியில் அம்மாநில அரசு ஈடுபட்டு வருகின்றது.

அதில் பாலக்காடு மாவட்டம் தேக்குவட்டை என்ற இடத்தில் பெரும்பாலான பணிகள் முடிவடைந்த நிலையில் மஞ்சகண்டி உள்ளிட்ட மற்ற இடங்களில் தடுப்பு அணைகள் கட்டும் பணியினை துரிதப்படுத்தியுள்ளது.

இதனால் கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்படும் நிலையில் விவசாயம் மட்டுமில்லாது குடிநீர் தட்டுபாடும் மிக பெரிய அளவில் ஏற்படும் என்பதால் கேரளா அரசு தடுப்பணைகள் கட்டுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை தமிழகத்தில் வலுத்துள்ளது.

இந்த சூழலில் கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில் திமுக, தந்தை பெரியார் திராவிட கழகம், கொங்கு ஜனநாயக கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்பட விவசாயிகள் கூட்டமைப்பு ஆகியவை பங்கேற்ற அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.

இதில் முன்னாள் அமைச்சர்கள் சுப்பு லட்சுமி ஜெகதீசன், முத்துச்சாமி, தந்தை பெரியார் திராவிட கழக பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டிணன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில அணை கட்டுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டதுடன் கோவை மாவட்டத்தில் இருந்து கேரளா செல்லும் வழித்தடமான க.க.சாவடியை மறித்து போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி வருகிற மார்ச் 12 ஆம் தேதி கோவையில் இருந்து கேரளா செல்லும் அனைத்து சாலைகளை மறித்து போராட்டம் நடத்த உள்ளதாகவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...