வேலைவாய்ப்பு வழங்குங்கள்..! - மயக்கவியல் தொழில்நுட்புநர்கள் கோவை ஆட்சியரிடம் மனு

தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மயக்கவியல் தொழில்நுட்புநர் படிப்பை முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கக் கோரி தமிழ்நாடு அனைத்து மயக்கவியல் தொழில் நுட்புநர்கள் நலச் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


கோவை: தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் படித்து முடித்தும் இதுவரை வேலை வாய்ப்பு வழங்கப்படவில்லை எனவும், உடனடியாக வேலைவாய்ப்பை வழங்க கோரியும் தமிழ்நாடு அனைத்து மயக்கவியல் தொழில் நுட்புநர்கள் நலச் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:

தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மயக்கவியல் தொழில் நுட்புநர் படிப்பை முறையாக படித்து பயிற்சி பெற்றுள்ள நிலையில், படிப்பை முடித்து 10 வருடங்களுக்கு மேலாகியும் தங்களுக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்கப்படவில்லை. கோவிட் காலகட்டத்தில் அரசு மருத்துவமனைகளிலும் அந்தந்த மாவட்டத்தில் பணியாற்றி வந்தோம்.

அந்தந்த மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் பதிவு செய்து, இதுவரை தங்களுக்கு வேலை வழங்கவில்லை. உடனடியாக வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 10 ஆண்டுகளுக்கு முன் படித்து முடித்த தங்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை வழங்க வேண்டும்.

தற்போதைய கல்விமுறை மற்றும் மதிப்பெண் முறைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் தங்களுக்கு மாவட்ட வேலை வாய்ப்பு பதிவு மூப்பை மதிப்பெண் முறையில் பணி நியமனம் செய்யும்பொழுது தங்களுக்கு 50 சதவிகிதம் முன்னுரிமை வழங்க வேண்டும். அறிவியல் பாடப் பிரிவு மற்றும் கலை பாடப்பிரிவில் படித்தவர்களுக்கும் வேலை வழங்கிட வேண்டும்.

இவ்வாறு தொழில் நுட்புநர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...