கோவையில் முதியவரைத் தாக்கி செல்போன், பணம் பறிப்பு - சிறுவர்கள் 3 பேர் கைது!

கோவை சிவானந்தகாலனி சாலையில் இரவில் பப்புசிங் என்ற முதியவர் நடந்து சென்றபோது, அவரை அடித்து துன்புறுத்தி செல்போன் மற்றும் பணத்தை பறித்துச் சென்ற வழக்கில்16, 17 வயது என 3 சிறுவர்கள் கைதாகியுள்ளனர். தலைமறைவாகியுள்ள கிறிஸ்டோபர் என்பவரை போலீசார் தேடிவருகின்றனர்.


கோவை: கோவை நாகராஜபுரத்தை சேர்ந்தவர் பப்பு சிங் (வயது51). இவர் பேக்கரி ஒன்றில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கேக் ஷாப் அமைந்திருக்கும் சிவானந்த காலனி சாலையில் அவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்தவழியாக வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்தது. அவரிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளது.

அப்போது,பப்புசிங் என்னிடம் பணம் இல்லை என்று தெரிவித்துள்ளார். ஆனால் அதை ஏற்றுக்கொள்ளாத கும்பல், அவரை அடித்து துன்புறுத்தி அவரிடம் இருந்த செல்போன் மற்றும் 2,200 ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டு தப்பி ஓடியது.முதியவர் கூச்சலிட்டு உதவிக்கு பொதுமக்களை அழைக்கும் முன்னே வழிப்பறிக் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பினர்.

இது குறித்து சாய்பாபா காலனி போலீசில் பப்பு சிங் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், 16 வயது சிறுவர்கள் 2 பேர், 17 வயது சிறுவன் ஒருவர் ஆகியோர் பிடிபட்டனர்.தப்பியோடிய கிறிஸ்டோபர் என்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர். இரவு நேரத்தில் முதியவரைத் தாக்கிய பணம், செல்போன் பறிப்பில் சிறுவர்கள் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...