பல்லடம் அருகே வயதான மூதாட்டி ஒருவர் தீயில் கருகி உயிரிழப்பு - உறவினர்கள் சோகம்!

பல்லடம் அருகேயுள்ள மகாலட்சுமி நகரில் வயதான தம்பதிகள் தனியாக தங்கியிருந்த நிலையில், விளக்கில் இருந்து, கட்டிலில் தீப்பற்றியதில் அதில் படுத்திருந்த மூதாட்டி அமிர்தம்மாள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மூதாட்டி ஒருவர் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பல்லடம் அருகேயுள்ள மகாலட்சுமி நகரின் எட்டாவது வீதியில் பொண்ணு செட்டி (95) என்பவர் தனது மனைவி அமிர்தம்மாள் என்பவருடன் வசித்து வருகிறார். இவரது மகன்கள் தாமு ஆட்டோ ஓட்டுனராகவும், ஹரிபாபு என்பவர் பனியன் தொழிலாளியாகவும் பணிபுரிந்து வருகின்றனர்.

எட்டாவது வீதியில் தனியாக வசித்து வரும் பொண்ணு செட்டி மற்றும் அமிர்தம்மாள் ஆகியோர் இன்று மாலை 6 மணியளவில் வீட்டில் மின்சாரம் இல்லாததால் விளக்கினை பற்ற வைத்துள்ளனர்.



இந்நிலையில், அமிர்தம்மாள் நைலான் கட்டிலில் படுத்திருந்த போது விளக்கில் இருந்து கட்டில் தீப்பிடித்து எரிந்ததில் அமிர்தம்மாள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.



இதனிடையே நடக்க முடியாத நிலையில் உள்ள கணவர் பொண்ணு செட்டி கீழே படுத்திருந்ததால் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினார். வீட்டிற்குள் தீப்பிடித்து எரிவதை கண்ட அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டனர். மேலும், சம்பவம் குறித்து அவர்களது மகன்களுக்கு தகவல் அளித்தனர்.

இதனையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் உயிரிழந்த அமிர்தம்மாளின் உடலை பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உயிர் தப்பிய 95 வயது பொண்ணு செட்டியை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தனியாக வசித்து வந்த மூதாட்டி தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...