துடியலூர் அருகே செங்காளிபாளையத்தில் மனைவியின் நடத்தையில் கணவன் சந்தேகம் காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டதால், விரக்தியில் மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை மாவட்டம் துடியலூர் அருகே கணவனின் சந்தேகத்தால் ஏற்பட்ட மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
துடியலூர் அருகேயுள்ள செங்காளிபாளையத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி சர்மிளா (27). இவர்களுக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆன நிலையில், 2 மகள்கள் உள்ளனர்.
இந்தநிலையில் மனைவி சர்மிளா அடிக்கடி செல்போனில் பேசியதாகவும், இதன் காரணமாக அவரது நடத்தையில், கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டதால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதனிடையே சம்பவத்தன்று மீண்டும் கணவன் -மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதில், விரக்தியடைந்த சர்மிளா, சாணிப்பவுடரை கரைத்து குடித்த நிலையில் மயங்கி விழுந்துள்ளார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு சர்மிளாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
துடியலூர் அருகேயுள்ள செங்காளிபாளையத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி சர்மிளா (27). இவர்களுக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆன நிலையில், 2 மகள்கள் உள்ளனர்.
இந்தநிலையில் மனைவி சர்மிளா அடிக்கடி செல்போனில் பேசியதாகவும், இதன் காரணமாக அவரது நடத்தையில், கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டதால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதனிடையே சம்பவத்தன்று மீண்டும் கணவன் -மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதில், விரக்தியடைந்த சர்மிளா, சாணிப்பவுடரை கரைத்து குடித்த நிலையில் மயங்கி விழுந்துள்ளார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு சர்மிளாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.