தாராபுரத்தில் 2 இருசக்கர வாகனங்கள் மோதி விபத்து - கோவில் பூசாரி பலி!

தாராபுரம் அருகே தளவாய்பட்டினத்தைச் சேர்ந்த கோவில் பூசாரியான சோமசுந்தரம் (57), தனது மனைவியுடன் உடுமலை சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, பின்னால் வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் சம்பவ இடத்தில் சோமசுந்தரம் உயிரிழந்தார்.


திருப்பூர்: தாராபுரத்தில் இரண்டு இருசக்கர வாகனங்கல் மோதிக் கொண்ட விபத்தில் கோவில் பூசாரி பலியானார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள தளவாய்பட்டினத்தை சேர்ந்தவர் சோமசுந்தரம் (57). கோவில் பூசாரி. இவருடைய மனைவி தனலட்சுமி (55). இவர்கள் இருவரும் இரவு இருசக்கர வாகனத்தில், உடுமலை சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது செலாம்பாளையத்தை சேர்ந்த கோகுல் (18) என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம், சோமசுந்தரம் வாகனம் மீது மோதியது.

இதில் பூசாரி சோமசுந்தரம் அவரது மனைவி தனலட்சுமி நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இருசக்கர வாகனத்தில் வந்த கோகுலும் கீழே விழுந்தார். அந்த வழியாக வந்தவர்கள் காயம் அடைந்த 3 பேரையும் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பூசாரி சோமசுந்தரம் உயிரிழந்தார். அவர் மனைவி தனலெட்சுமி மற்றும் கோகுல் ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...