கோவை வரதராஜபுரத்தில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம் மையத்திற்குள் நுழைந்து ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயன்ற புலியகுளம் பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி ஆனந்தன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
கோவை: வரதராஜபுரம் பகுதியில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்துத் திருட முயன்றவரை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
கோவை சிங்காநல்லூர் அடுத்த வரதராஜபுரம் பகுதியில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம் மையத்திற்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் கம்பியால் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்துக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. இதைக் கண்ட பொதுமக்கள் உடனடியாக செல்போன் மூலம் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
விரைந்து வந்த போலீசார் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்துக் கொண்டிருந்த நபரை பிடித்தனர். விசாரணையில் அவர் புலியகுளம் பகுதியைச் சேர்ந்த மாரிசாமி என்பவரது மகன் ஆனந்தன் (39) என்பது தெரியவந்தது.
மேலும் கட்டிட வேலை செய்து வந்த ஆனந்தன் பணத் தேவைக்காக ஏடிஎம் இயந்திரத்தை உடைத்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
கோவை சிங்காநல்லூர் அடுத்த வரதராஜபுரம் பகுதியில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம் மையத்திற்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் கம்பியால் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்துக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. இதைக் கண்ட பொதுமக்கள் உடனடியாக செல்போன் மூலம் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
விரைந்து வந்த போலீசார் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்துக் கொண்டிருந்த நபரை பிடித்தனர். விசாரணையில் அவர் புலியகுளம் பகுதியைச் சேர்ந்த மாரிசாமி என்பவரது மகன் ஆனந்தன் (39) என்பது தெரியவந்தது.
மேலும் கட்டிட வேலை செய்து வந்த ஆனந்தன் பணத் தேவைக்காக ஏடிஎம் இயந்திரத்தை உடைத்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.