கோவையில் உரிமையாளருக்கு தெரியாமல் ரூ.6 லட்சம் திருடிய காசாளர் கைது!

கோவையில் புட் பேக்டரி உரிமையாளர் கிருஷ்ணகுமாருக்கு தெரியாமல் சிறுக சிறுக பண மோசடியில் ஈடுபட்ட காசாளர் சுரேந்தர் என்பவரை பீளமேடு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் மொத்தமாக ரூ.6.05லட்சம் மோசடி செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.


கோவை: பீளமேடு பகுதியில் புட் பேக்டரி உரிமையாளருக்கு தெரியாமல் பண மோசடியில் ஈடுபட்ட ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவர் தண்ணீர் பந்தல் அருகே புட் பேக்டரி ஒன்றை நடத்தி வருகின்றார். கிருஷ்ணகுமார் மற்றும் அவரது தந்தை தங்கவேலு இருவரும் இணைந்து இந்த தொழிலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் இவர்களின் நிறுவனத்தில் கேரளாவைச் சேர்ந்த சுரேந்தர் (31) என்பவர் காசாளராக பணியாற்றி வந்தார்.

நிறுவனத்தின் வரவு செலவு கணக்குகளை சரிபார்த்து வந்தார். பணியின் போது சுரேந்தர் தனது வங்கிக் கணக்கிற்கு, கம்பெனி வங்கிக் கணக்கிலிருந்து சிறுக, சிறுக பணத்தை தன்னுடைய வங்கி கணக்கிற்கு மாற்றியுள்ளார். பெருந்தொகையாக இல்லாமல் சிறுக, சிறுக பணத்தை நூதன முறையில் சுரேந்தர் திருடியது ஆரம்பத்தில் உரிமையாளரான கிருஷ்ணகுமாருக்கு தெரியவில்லை.

இந்நிலையில் வரவு செலவில் சற்று மாறுதலை உணர்ந்த நிர்வாகத்தினர் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சுரேந்தர் ஆறு மாத காலமாக ரூ.6.05 லட்சத்தை தனது வங்கிக் கணக்குக்கு மாற்றியது தெரிய வந்தது. இது குறித்து புட் பேக்டரி உரிமையாளர் கிருஷ்ணகுமார் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சுரேந்தரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பணத்தைக் காக்க வேண்டிய காசாளரே, பணத்தை திருடி கைதான சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...