கோவையைச் சேர்ந்த பொறியாளர் வீரமணி(31) பணியை முடித்து விட்டு இருசக்கர வாகனத்தில் இரவு வீட்டிற்குச் சென்ற போது, நெசவர் காலனி அருகே வழிமறித்த மர்ம கும்பல் கத்தியைக் காட்டி, தங்க செயின், செல்போன் மற்றும் பணத்தைப் பறித்துச் சென்றது. புகாரின் பேரில் போலீசார் குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.
கோவை: கோவை நெசவர் காலனி அருகே இரவில் தனியாகச் சென்ற பொறியாளரிடம் மர்ம கும்பல் கத்தியைக் காட்டி மிரட்டி கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை ஒண்டிபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் வீரமணி (31). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் தனது பணியை முடித்துவிட்டு நேற்றிரவு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார்.
நெசவர் காலனியில் உள்ள டாஸ்மாக் அருகே சென்றபோது, அவரை வழிமறித்த மூன்று பேர் கொண்ட கும்பல் கத்தியைக் காட்டி மிரட்டி, வீரமணி அணிந்திருந்த தங்கச் சங்கிலி, செல்போன் மற்றும் ரூ.1500 ரொக்கம் உள்ளிட்டவற்றைப் பறித்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது.
இது குறித்து சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் வீரமணி அளித்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்த போலீசார், வழிப்பறியில் ஈடுபட்ட மூன்று பேர் கொண்ட கும்பலை வலை வீசி தேடி வருகின்றனர்.
கோவை ஒண்டிபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் வீரமணி (31). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் தனது பணியை முடித்துவிட்டு நேற்றிரவு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார்.
நெசவர் காலனியில் உள்ள டாஸ்மாக் அருகே சென்றபோது, அவரை வழிமறித்த மூன்று பேர் கொண்ட கும்பல் கத்தியைக் காட்டி மிரட்டி, வீரமணி அணிந்திருந்த தங்கச் சங்கிலி, செல்போன் மற்றும் ரூ.1500 ரொக்கம் உள்ளிட்டவற்றைப் பறித்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது.
இது குறித்து சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் வீரமணி அளித்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்த போலீசார், வழிப்பறியில் ஈடுபட்ட மூன்று பேர் கொண்ட கும்பலை வலை வீசி தேடி வருகின்றனர்.