கோவையைச் சேர்ந்த தனியார் கட்டுமான நிறுவனத்துக்குச் சொந்தமான லாரி, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் அருகே அதிகாலை சுமார் 4.30 மணிக்குச் சென்ற போது, எதிர்பாராத விதமாக டிவைடரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
கோவை: வடவள்ளி- மருதமலை சாலையில் சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
கோவையில் உள்ள சில கட்டுமான பணிகளில் ஈடுபட்டுவரும் தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான கனரக வாகனம் ஒன்று வடவள்ளி - மருத மலை சாலையில் சென்றுகொண்டிருந்தது. அப்போது தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் அருகே லாரி சென்றுகொண்டிருந்தது. அப்போது லாரி அதிகாலை 4.30 மணிக்கு எதிர்பாராத விதமாக டிவைடரில் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்துக்குள்ளான லாரியை மீட்கும் பணி நடந்து வருகின்றது. அதிகாலை விபத்து நடந்ததனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த நிலையில் வாகனத்தை ஓட்டிய ஓட்டுநர் உறக்கத்தில் வண்டியை ஓட்டியதால் விபத்து நடந்ததா? வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததா? அல்லது வேறு என்ன காரணம் என வடவள்ளி போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
முக்கிய சாலையில் விபத்து நடந்ததால் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. லாரியை மீட்ட பின்னர் போக்குவரத்து வழக்கம் போல இயல்புநிலைக்குத் திரும்பியது.
கோவையில் உள்ள சில கட்டுமான பணிகளில் ஈடுபட்டுவரும் தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான கனரக வாகனம் ஒன்று வடவள்ளி - மருத மலை சாலையில் சென்றுகொண்டிருந்தது. அப்போது தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் அருகே லாரி சென்றுகொண்டிருந்தது. அப்போது லாரி அதிகாலை 4.30 மணிக்கு எதிர்பாராத விதமாக டிவைடரில் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்துக்குள்ளான லாரியை மீட்கும் பணி நடந்து வருகின்றது. அதிகாலை விபத்து நடந்ததனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த நிலையில் வாகனத்தை ஓட்டிய ஓட்டுநர் உறக்கத்தில் வண்டியை ஓட்டியதால் விபத்து நடந்ததா? வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததா? அல்லது வேறு என்ன காரணம் என வடவள்ளி போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
முக்கிய சாலையில் விபத்து நடந்ததால் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. லாரியை மீட்ட பின்னர் போக்குவரத்து வழக்கம் போல இயல்புநிலைக்குத் திரும்பியது.