கோவை ஆர்.எஸ் புரம் சாலையில் போக்குவரத்து நெரிசல்! - வாகன ஓட்டிகள் அவதி

காந்திபுரம், ஒண்டிபுதூர், டவுன்ஹால் பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள், ஆர்.எஸ்.புரம் டி.பி. சாலை வழியாக தான் செல்கிறது. இந்த சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.


கோவை: ஆர்.எஸ் புரம் டிபி ரோட்டில் இருபுறங்களிலும் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

கோவையில் ஆர்.எஸ்.புரம் டி.பி. சாலை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சாலையாகும். காந்திபுரம், ஒண்டிபுதூர், டவுன்ஹால் பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள் இந்த சாலை வழியாகத் தான் செல்கிறது.

இதுதவிர இந்த பகுதியில் ஏராளமான வர்த்தக நிறுவனங்கள், கடைகள் அதிகளவில் உள்ளன. இதன் காரணமாகப் பொருட்கள் வாங்குவதற்கு ஏராளமான பொதுமக்கள் அந்த பகுதிக்கு வருகின்றனர்.

இதனால் எப்போதும் இந்த சாலையில் வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும். இந்த நிலையில் இந்த சாலையின் வலது புறமும், இடது புறமும் 4 சக்கர வாகனங்களை நிறுத்தி விடுகின்றனர். இதனால் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:

இந்த சாலையில் ஏராளமான வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. இங்கு வரும் வாடிக்கையாளர்கள் காரை சாலையோரம் நிறுத்தி விட்டு பொருட்கள் வாங்கச் செல்கிறார்கள். அவர்கள் வரும் வரை அந்த கார் அங்கேயே நிற்கும்.

இதனால் மாலை நேரங்களில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலையின் ஒரு புறத்தில் மட்டும் தான் வாகனங்களை பார்க்கிங் செய்ய வேண்டும் எனப் போக்குவரத்து போலீசார் கூறினர். விதிமுறை விதித்துள்ளனர். அனைவருமே அதனை கடைபிடித்து வந்தனர். ஒரு மாதம் வலது புறமும், மற்றொரு மாதம் இடது புறமும் நிறுத்துமாறு வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தினர்.

அதன்படி அனைவரும் தங்கள் வாகனங்களை நிறுத்தி வந்தனர். ஆனால் தற்போது போலீசார் எதையும் கண்டு கொண்டதாக தெரியவில்லை. இதனால் பகுதிக்கு 4 சக்கர வாகனங்கள், மோட்டார் சைக்கிள்களில் வருபவர்கள் சாலையின் இரு புறங்களிலும் தங்கள் வாகனத்தை நிறுத்தி விட்டுச் செல்கின்றனர். இதனால் பல நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதற்கு முன்பு போலீசார் வந்து வாகனங்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர்.

ஆனால் தற்போது கண்டுகொள்வதில்லை. இதனால் அனைத்து வாகன உரிமையாளர்களும் அவர்கள் இஷ்டத்திற்கு வாகனத்தை விட்டு செல்கிறார்கள். எனவே வாகனங்களை வரைமுறைப்படுத்தி நிறுத்தினால் மட்டுமே இந்த போக்குவரத்து நெருக்கடிக்கு ஒரு தீர்வு காண முடியும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...