கோவை மாவட்டம் சிறுமுகை ஜடையம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ். கட்டிடத் தொழிலாளியான இவர், வேலைக்காக இருசக்கர வாகனத்தில் மேட்டுப்பாளையம் அருகே சென்ற போது எதிரே சரக்கு வாகனம் மோதியதில், சம்பவ இடத்திலேயே பலியானார்.
கோவை: மேட்டுபாளையம் அருகே கட்டிடத் தொழிலாளி சென்ற இருசக்கர வாகனம் மீது சரக்கு வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை ஜடையம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (35). கட்டிடத் தொழிலாளி. இவருக்குத் திருமணமாகி இரு பெண், ஒரு ஆண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் நாகராஜ் தனக்கு சொந்தமான பைக்கில் சிறுமுகையிலிருந்து வேலைக்காக மேட்டுப்பாளையம் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது அய்யப்பன் கோவில் அருகே சென்றபோது எதிரே வந்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சரக்கு வாகனம் பைக் மீது மோதியது. இதில் நாகராஜ் நிலை தடுமாறி கீழே விழுந்தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, அதே இடத்தில் உயிரிழந்தார்.
தகவலறிந்த சிறுமுகை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து சிறுமுகை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை ஜடையம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (35). கட்டிடத் தொழிலாளி. இவருக்குத் திருமணமாகி இரு பெண், ஒரு ஆண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் நாகராஜ் தனக்கு சொந்தமான பைக்கில் சிறுமுகையிலிருந்து வேலைக்காக மேட்டுப்பாளையம் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது அய்யப்பன் கோவில் அருகே சென்றபோது எதிரே வந்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சரக்கு வாகனம் பைக் மீது மோதியது. இதில் நாகராஜ் நிலை தடுமாறி கீழே விழுந்தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, அதே இடத்தில் உயிரிழந்தார்.
தகவலறிந்த சிறுமுகை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து சிறுமுகை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.