உடுமலை அருகே முறையாக குடிநீர் வழங்ககோரி சின்ன வாளவாடியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் வாளவாடி - தளி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருப்பூர்: உடுமலை அருகே காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியம் பெரியவாளவாடி ஊராட்சியில் சுமார் 2000-க்கு அதிகமான குடும்பங்கள் உள்ளன. இந்நிலையில் கடந்த பல ஆண்டுகளாக, இந்த பகுதி மக்கள் பூலாங்கிணறு கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் பெற்று வந்தனர்.

இதற்கிடையில் கடந்த சில நாட்களாகவே பூலாங்கிணறு குடிநீர் திட்டம் கைவிடுவதை எதிர்த்தும், நான்கு நாட்களாக குடிநீர் வழங்காததைக் கண்டித்தும், சின்னவாளவாடி கிராம பெண்கள் 100-க்கும் மேற்பட்டோர் காலிகுடங்களுடன் வாளவாடி-தளி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த ஊராட்சி மன்றத் தலைவர் தேவராஜ் பேச்சுவார்த்தை நடத்தியும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து செல்லாமல் 1 மணி நேரத்திற்கும் மேலாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியம் பெரியவாளவாடி ஊராட்சியில் சுமார் 2000-க்கு அதிகமான குடும்பங்கள் உள்ளன. இந்நிலையில் கடந்த பல ஆண்டுகளாக, இந்த பகுதி மக்கள் பூலாங்கிணறு கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் பெற்று வந்தனர்.
இதற்கிடையில் கடந்த சில நாட்களாகவே பூலாங்கிணறு குடிநீர் திட்டம் கைவிடுவதை எதிர்த்தும், நான்கு நாட்களாக குடிநீர் வழங்காததைக் கண்டித்தும், சின்னவாளவாடி கிராம பெண்கள் 100-க்கும் மேற்பட்டோர் காலிகுடங்களுடன் வாளவாடி-தளி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த ஊராட்சி மன்றத் தலைவர் தேவராஜ் பேச்சுவார்த்தை நடத்தியும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து செல்லாமல் 1 மணி நேரத்திற்கும் மேலாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.