கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை - 2 பேருக்கு வழங்கிய கோவை ஆட்சியர்!

கோவை மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் பணியின்போது காலமான இருவரது குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி வழங்கினார்.


கோவை: கோவை மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து வந்த நவமணி சில தினங்களுக்கு முன் உயிரிழந்தார். இந்த நிலையில் அவரது மகன் நரேந்திர குமாருக்கு கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர் பணிக்கான நியமன ஆணையினை வழங்கினார்.



இதேபோன்று, கோவை மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்த ரவிக்குமார் உயிரிழந்த நிலையில் அவரது மகள் தனுஸ்ரீக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) அலர்மேல் மங்கை மற்றும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கமலக்கண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...