சட்டமன்றத்தில் ரகசிய வாக்கெடுப்பு கோரிய திமுகவின் கோரிக்கையில் எவ்வித நியாயம் இல்லை, கோவையில் வைகோ கருத்து.


சட்டமன்றத்தில் ரகசிய வாக்கெடுப்பு கோரிய திமுகவின் கோரிக்கையில் எவ்வித நியாயம் இல்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கருத்து தெரிவித்துள்ளார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விமானம் மூலம் கோவை வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர் தமிழகத்தில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் அரசியல் சூழல் குறித்து தாம் எந்தவிதமான கருத்துக்களையும் கூறவில்லை எனவும் இன்று சட்டமன்றத்தில் திமுக ரகசிய வாக்கெடுப்பு நடத்த விடுத்த கோரிக்கை நியாயம் இல்லை எனவும் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் இன்று கடைபிடிக்கப்பட்ட நடைமுறைதான் காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருவதாக கூறிய அவர் ரகசிய வாக்கெடுப்பு என்பதற்கு இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் எந்தவிதமான சலுகையும் வழங்கப்படவில்லை எனவும் அவர் அப்போது தெரிவித்தார். எனவே இந்த கோரிக்கைகளை முன்வைத்து திமுக சட்டமன்றத்தில் நடத்திய விவாதங்களும், அமளிகளும் தேவையில்லாத ஒன்று எனவும் வைகோ அப்போது குறிப்பிட்டார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...