சிங்காநல்லூரில் மதுபோதையில் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

சிங்காநல்லூர் அடுத்த உப்பிலிபாளையம் பகுதியை சேர்ந்த தச்சு வேலை செய்து வந்த ராம்கி என்பவர் மதுபோதையில் வீட்டின் மாடியில் செல்போன் பேசிக் கொண்டிருந்த போது, திடீரென விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


கோவை: கோவை மாவட்டம் சிங்காநல்லூர் அருகே வீட்டின் மாடியில் மதுபோதையில் செல்போன் பேசிய நபர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிங்காநல்லூர் அடுத்த உப்பிலிபாளையம் சீனிவாசா நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் ராம்கி(35) தச்சு தொழில் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் குடிப்பழக்கம் கொண்ட ராம்கி நேற்றைய தினம், அவரது வீட்டின் மாடியில்மதுபோதையில் நடந்தபடி, செல்போன் பேசிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது அவர் திடீரென மாடியிலிருந்து கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.

இதில் படுகாயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு, சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுதொடர்பாக அவரது மனைவி சிங்கநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுபோதையில் மாடியிருந்து கீழே விழுந்து ராம்கி உயிரிழந்த சம்பவம் குடும்பத்தார் மற்றும் உறவினர்கள்பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...