பல்லடம் அருகே அதிகாரிகளை விவசாயிகள் சிறைபிடித்ததால் பரபரப்பு

பல்லடம் அருகே வாவிபாளையத்தில் பிஏபி வாய்க்காலில் தண்ணீர் திருடுவதாகக் கூறி மின் இணைப்பைத் துண்டிக்க வந்த அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளை விவசாயிகள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


திருப்பூர்: பல்லடம் அருகே பிஏபி வாய்க்காலில் தண்ணீர் திருடுவதாகக் கூறி மின் இணைப்பைத் துண்டிக்க வந்த அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களை உள்ளடக்கிய பரம்பிக்குளம் ஆழியாறு கால்வாய் பிரதான கால்வாய் சுமார் 130 கிலோமீட்டர் தூரத்திற்கும் கிளை கால்வாய்கள் ஆயிரம் கிலோமீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ளன.



கால்வாயில் திறந்து விடப்படும் தண்ணீர் பெருமளவில் திருடப்படுவதாகக் குற்றச்சாட்டு இருந்ததை அடுத்து தண்ணீர் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் விவசாயிகள் வழக்குத் தொடுத்த நிலையில், நீதிமன்ற வழிகாட்டுதல் படி கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பிஏபி கால்வாயிலிருந்து 50 மீட்டர் தூரத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகளின் மின் இணைப்பைத் துண்டிக்கக் கடந்த ஆறு மாதங்களாக பொதுப்பணித்துறை சார்பில் விவசாயிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது.



இந்நிலையில் இன்று திருப்பூர் மற்றும் கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட வளைய பாளையம், வாவிபாளையம் ஆகிய பகுதிகளில் 12 விவசாயிகள் வாய்க்காலிலிருந்து 50 மீட்டர் தூரத்திற்குள் ஆழ்துளைக் கிணறு அமைத்துள்ளதாகக் கூறி மின் இணைப்பைத் துண்டிப்பதற்காக மின்வாரிய அதிகாரிகள் வந்திருந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மின் இணைப்பைத் துண்டிக்க வந்த அதிகாரிகளைச் சிறை பிடித்தனர்.

பி ஏ பி வாய்க்காலுக்காக நிலம் அளித்தவர்களுக்கு இழப்பீடு கூட இன்னும் வாங்காத நிலையில் சிறு விவசாயிகளின் மின் இணைப்பைத் துண்டிப்பது நியாயமா என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் 12 விவசாயிகளின் மின் இணைப்பை மட்டும் துண்டிக்காமல் அனைத்து விவசாயிகளின் மின் இணைப்பையும் துண்டித்து விடுங்கள் எனத் தெரிவித்தனர். இதனால் மின் இணைப்பு துண்டிக்க வந்த அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டனர்.



மேலும் வறட்சி பகுதியாக இருந்த திருப்பூர் கோவை மாவட்டங்களில் பிஏபி வாய்க்கால் திட்டம் வந்த பின்பு தான் விவசாயம் செழிப்படைந்ததாகவும் திடீரென எந்த அறிவிப்பும் இல்லாமல் நீதிமன்ற உத்தரவு எனக் கூறி அதிகாரிகள் மின் இணைப்பைத் துண்டித்தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் எனவும், நீதிமன்ற உத்தரவை மீண்டும் பரிசீலனை செய்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றுமாறு அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...