கோவை அருகே ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர்கள் பறிமுதல் - சட்டவிரோத கும்பல் கைது!

கோவை காரமடை அருகே பழைய கட்டிடங்களை தகர்ப்பதற்கு வைத்திருந்த 622 ஜெலட்டின் குச்சிகள் மற்றும் 350 எலக்ட்ரிக் டெட்டனேட்டர்களை பறிமுதல் செய்து, திருச்சூரை சேர்ந்த தினேஷ், திருவாரூரை சேர்ந்த செந்தில்குமார், காரமடையை சேர்ந்த சுரேஷ்குமார் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவை மாவட்டம் காரமடை அருகே ஆய்வாளர் சுல்தான் இப்ராஹிம் மற்றும் தலைமை காவலர் சிவப்பிரகாஷ் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கண்ணார்பாளையம் பிரிவு சுடுகாடு அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் இரண்டு இருசக்கர வாகனங்களில் சிலர் நின்றுகொண்டிருந்தனர்.



அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் திருச்சூரை சேர்ந்த தினேஷ்(வயது23), ஆனந்த் (வயது25), காரமடையை சேர்ந்த சுரேஷ்குமார் (வயது41) மற்றும் திருவாரூரைச் சேர்ந்த செந்தில்குமார் (வயது43) என்பது தெரியவந்தது.



அவர்கள் வைத்திருந்த கைப்பையை சோதனை செய்து பார்த்தபோது, அதில், 26 கட்டுகளில் 650 எலக்ட்ரிக் டெட்டனேட்டர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தடை செய்யப்பட்ட இந்த வெடிகளை வைத்திருந்த அந்த நபர்களிடம் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

அப்போது, சுரேஷ்குமார் மற்றும் செந்தில்குமார் ஆகியோர் பழைய கட்டிடங்களை தகர்த்துக் கொடுக்கும் தொழில் செய்கின்ற, காரமடையை சேர்ந்த ரங்கராஜ் என்பவரிடம் வேலை செய்து வருவது தெரியவந்தது.

இந்த நிலையில், ரங்கராஜ் பழைய கட்டிடங்களை தகர்ப்பதற்கு வெடிபொருளை எவ்வித உரிமையுமின்றி, சட்ட விரோதமாக பயன்படுத்தி வருவது போலீசாரின் விசாரணையில் வெளிவந்தது. அவ்வாறு பயன்படுத்தப்படும் எலக்ட்ரிக் டெட்டனேட்டரில் சிலவற்றை அதிக விலைக்கு சட்டத்துக்கு புறம்பாக கேரளாவிற்கு விற்று லாபம் சம்பாதித்திருக்கின்றனர்.

அதனடிப்படையில், காவல்துறையினர் ரங்கராஜ் என்பவரை கைது செய்து, அவரை விசாரித்திருக்கின்றனர்.

அப்போது அவரது வேலை நடந்துவரும் மற்றொரு இடத்திலிருந்து எவ்வித உரிமம் இல்லாமல் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 622 ஜெலட்டின் குச்சிகள் மற்றும் 350 எலக்ட்ரிக் டெட்டனேட்டர் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

வெடிபொருட்களை ரங்கராஜ் என்பவர் சிறுமுகை சேர்ந்த பெருமாள், அன்னூரை சேர்ந்த கோபால் மற்றும் காரமடையை சேர்ந்த சந்திரசேகரன் ஆகியோரிடமிருந்து வாங்கியிருப்பதும் உறுதியானது.

இதையடுத்து போலீசார் நடத்திய தொடர் விசாரணையின் அடிப்படையில், இதில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டனர். தகவல் அறிந்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கைதானவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட மொத்தம் 1244 எலக்ட்ரிக் டெட்டனேட்டர்கள் மற்றும் 622 ஜெலட்டின் குச்சிகளையும் பார்வையிட்டதோடு, இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்டு துரித நடவவடிக்கை எடுத்த காவல்துறையினரையும் பாராட்டினார்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...