கோவை வெள்ளியங்கிரி மலையில் நெல்லை தொழிலாளி மயங்கி விழுந்து பலி

கோவை வெள்ளிங்கிரி மலை ஏறிய திருநெல்வேலியை சேர்ந்த தொழிலாளி முருகன் என்பவர், இரண்டாவது வழுக்கல் மலைக்கு சென்றபோது மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்தார். ஆலந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


கோவை: திருநெல்வேலி மாவட்டம் பத்தமடையை சேர்ந்தவர் முருகன் (வயது60). இவருக்குதிருமணம் ஆகி குழந்தைகள் இல்லாமல், மனைவியைப் பிரிந்து கடந்த 30 வருடங்களாக அண்ணன் மகள் மகாலட்சுமி என்பவரது பொறுப்பில் வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில் நேற்று அவரது ஊரை சேர்ந்த நண்பர்கள் 10 பேருடன் கோவை பூண்டி வெள்ளிங்கிரி மலை ஏறுவதற்காக வந்துள்ளார். இரண்டாவது வருடமாக வெள்ளிங்கிரி மலை ஏறும் முருகன், இன்று அதிகாலை மலையேற தொடங்கினார்.முதல் மலையை, கடந்து இரண்டாவது வழுக்கல் மலைக்கு சென்றபோது திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

இதையடுத்து, அங்கு அவருடன் இருந்தவர்கள் சோதனை செய்தபோது அவர் உயிரிழந்தது தெரியவந்தது. வனத்துறையினர் உதவியுடன் இறந்த முருகனின் உடல் கீழே கொண்டுவரப்பட்டது. பின்னர் பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு முருகன் உடல் அனுப்பி வைக்கப்பட்டது. இந்தசம்பவம் தொடர்பாக ஆலந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...