உடுமலை அரசு பள்ளியில் காய்கறித் தோட்டம் அமைக்கும் பணி தீவிரம்

நமது பசுமை பள்ளித் திட்டத்தின் கீழ் உடுமலையில் பாரதியார் நூற்றாண்டு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வெண்டை, அவரை, பாகல், முருங்கை, கொத்தவரை, கீரை, தக்காளி, பொரியல் தட்டை விதைகளை விதைத்து குறுந்தோட்டம் அமைக்கப்பட்டது.


திருப்பூர்: உடுமலையில் பாரதியார் நூற்றாண்டு அரசு மகளிர் பள்ளியில் காய்கறித்தோட்டம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை பாரதியார் நூற்றாண்டு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நமது பசுமை பள்ளித் திட்டத்தின் கீழ் குறு காய்கறித் தோட்டம் அமைக்கும் பணி நடைபெற்றது. தமிழ்த்துறை சுயநிதிப் பிரிவைச் சேர்ந்த மாணவிகள், பள்ளி வளாகத்தில் வெண்டை, அவரை, பாகல் உள்ளிட்ட காய்கறிகளின் விதைகளை விதைத்தனர்.



ஸ்ரீ ஜி.வி.ஜி. விசாலாட்சி மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறை சுயநிதிப் பிரிவின் விரிவாக்கத் திட்டத்தின் கீழ் நடைபெற்ற நிகழ்வுக்கு உடுமலை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் மகாலட்சுமி முருகன், பாரதியார் நூற்றாண்டு மகளிர் பள்ளித் தலைமை ஆசிரியர் விஜயா ஆகியோர் தலைமை தாங்கினர்.



கல்லூரியின் தமிழ்த்துறை சுயநிதிப் பிரிவைச் சேர்ந்த மாணவிகள், பள்ளி வளாகத்தில் வெண்டை, அவரை, பாகல், முருங்கை, கொத்தவரை, கீரை, தக்காளி, பொரியல் தட்டை உள்ளிட்ட காய்கறிகளின் விதைகளை, விதைத்து குறுந்தோட்டம் அமைக்கும் பணியினை மேற்கொண்டனர்.

இந்த காய்கறித்தோட்டத்தின் மூலம் கிடைக்கும் காய்கறிகளை மதிய சத்துணவுக்குப் பயன்படுத்துவதன் மூலம் தாங்களே விளைவித்த காய்கறிகளை தாங்களே உண்ணும் சந்தோஷம் மாணவிகளுக்குக் கிடைக்கும்.

அத்துடன் காய்கறித்தோட்டம் உருவாக்குவதில் ஆர்வம் ஏற்பட்டு வீடுதோறும் காய்கறித் தோட்டம் அமைப்பதன் மூலம் சத்தான, புத்தம் புதிய, ரசாயனக் கலப்பில்லாத காய்கறிகளை அனைவரும் பயன்படுத்தும் வாய்ப்பு உருவாகும்.

இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ ஜி.வி.ஜி. விசாலாட்சி மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறை சுயநிதிப் பிரிவின் துறைத்தலைவர் பிருந்தா, ஆசிரியர்கள் ராஜேஸ்வரி, மணிமேகலை, ரம்யா, சத்யப்ரியா மற்றும் தமிழ்துறை மாணவிகள் இணைந்து செய்திருந்தனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...