கோவை சமூக ஆர்வலர் முகமது ரஃபி-க்கு 'சேவைத் திலகம் விருது' வழங்கிய பேரூர் ஆதினம்!

தமிழ்நாடு பல்சமய நல்லுறவு இயக்கத்தின் மாநில தலைவரான முகம்மது ரஃபி, மத நல்லிணக்க பணிகளில் ஈடுபட்டு வருவதை போற்றும் வகையில் சேவைத் திலகம் விருது வழங்கி பேரூர் ஆதினம் கவுரவித்துள்ளது.



கோவை: கோவை சாய்பாபா காலனி பகுதியில் வசிப்பவர் முகமது ரஃபி. தமிழ்நாடு பல்சமய நல்லுறவு இயக்கத்தின் மாநில தலைவரான முகம்மது ரஃபி, மத நல்லிணக்க பணிகளில் ஈடுபட்டு வருகின்றார். குறிப்பாக மதநல்லிணக்கத்தை போற்றும் வகையில் பொங்கல், கிறிஸ்துமஸ், தீபாவளி என அனைத்து பண்டிகைகளையும், சமய வேறிபாடுகளின்றி, அனைத்து மத சான்றோர்களுடன் கொண்டாடுவார்.



இதுமட்டுமின்றி நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். அதேபோன்று தமிழகம் முழுவதும் தொடர்ந்து பல்வேறு மத நல்லிணக்க நிகழ்ச்சிகள், கருத்தரங்குகளை நடத்தி வருகிறார்.

போதை பொருள் தீமைகள் குறித்து குறும்படங்கள் தயாரித்து, கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். இவர் கடந்த கொரோனா காலத்தில், பசி பட்டினியுடன் தவித்த வடமாநில தொழிலாளர்கள் மற்றும் ஏழை எளியோருக்கு உணவளித்து உதவினார். 

ஒரு கட்டத்தில் பொருளாதார நெருக்கடியில் இருந்த முகமது ரஃபி, தன் மனைவி மற்றும் அண்ணன் மகள் திருமணத்துக்காக வைத்திருந்த நகைகள் மற்றும் பணத்தை செலவிட்டு உணவளித்து வந்தார்.



இந்த சம்பவம் தமிழ்நாடு அளவில் கவனத்தை ஈர்த்திருந்தது. இவ்வாறு, மதபாகுபாடின்றி அனைத்து நலப்பணிகளையும் செய்து வருகின்ற இவரின் சேவையை பாராட்டி, கோவை பேரூர் ஆதினம் சார்பாக பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகமது ரஃபி-க்கு சேவை திலகம் விருது வழங்கப்பட்டுள்ளது.

பேரூர் ஆதினம் தமிழ் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், பேரூர் ஆதினம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் முகமது ரஃபி-க்கு  சேவை திலகம் விருதை வழங்கி கவுரவித்தார். 

இஸ்லாமியரான முகமது ரஃபி-க்கு , இந்து வழிபாடு நடக்கின்ற பேரூர் மடத்தில் மடாதிபதியான சாந்தலிங்க மருதாச்சல அடிகளார் வழங்கிய விருது மத நல்லிணக்க ஒற்றுமைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...