மு.க ஸ்டாலின் தாக்கப்பட்டதை கண்டித்து கோவையில் திமுகவினர் போராட்டம்

தமிழக சட்டசபையில் இன்று திமுக எதிர்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின் அவைக்காவலர்களால் தாக்கப்பட்டதை கண்டித்து கோவையில் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

தமிழக சட்டசபையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. ஆனால் சபாநாயகர் அதை நிராகரித்துவிட்ததால், சட்டசபையில் அமளி ஏற்பட்டது. இதனால் திமுக உறுப்பினர்கள் வலுக்கட்டாயமாக அவைக் காவலர்களால் வெளியேற்றப்பட்டனர். இதில் திமுக எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட தி.மு.க.வில் பலர் தாக்கப்பட்டனர். இதனை கண்டித்து மு.க ஸ்டாலின் சென்னை மெரினாவில் உள்ள காந்தி சிலை முன்பு போராட்டம் நடத்தி வருகிறார். இதனை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதன் ஒருபகுதியாக, கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள கோயமுத்தூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு கோவை திமுக இளைஞர் அணி சார்பில் கோட்டை அப்பாஸ் தலைமையில் 20க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் சட்டமன்ற உறுப்பினர் தனபாலுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

அதேபோல், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொங்கலூர் பழனிச்சாமி தலைமையில் 100க்கும் மேற்பட்ட திமுகவை சேர்ந்த தொண்டர்கள் தனபாலுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

Newsletter

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...

நாளை பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு!

தமிழ்நாட்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 8) காலை 9.30 மணிக்கு வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்...

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...